Skip to main content

6 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்... அடையாற்றில் வீசப்பட்ட தலை... அதிரவைக்கும் திமுக நிர்வாகியின் கொலை!

Published on 14/05/2022 | Edited on 14/05/2022

 

 Body cut into 6 pieces ... Head thrown at Adyar ...  DMK executive incident

 

காணாமல் போன திமுக நிர்வாகி கொலை செய்யப்பட்டு 6 துண்டுகளாக வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்த கொலை தொடர்பாக பெண் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

திருவொற்றியூர் 7 வார்டு திமுக பிரதிநிதியான சக்கரபாணி காணாமல் போனதாக மணலி காவல் நிலையத்தில் அவரது குடும்பத்தினர் புகார் கொடுத்திருந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் சக்கரபாணியின் மொபைல் எண்ணை கொண்டு விசாரணை செய்ததன் அடிப்படையில் ராயபுரம் கிரேஸ் கார்டன் பகுதியில் உள்ள வீட்டில் சோதனையில் போலீசார் ஈடுபட்டபொழுது கழிவறையில் தலையில்லாத உடல் கண்டெடுக்கப்பட்டது. மேலும் உடல் பகுதி 6 துண்டுகளாக வெட்டப்பட்டு சாக்குப்பையில் மூட்டை கட்டப்பட்டு கிடந்தது.

 

 Body cut into 6 pieces ... Head thrown at Adyar ...  DMK executive incident

 

இதுதொடர்பாக அந்த வீட்டில் இருந்த தமின்மானு என்ற பெண்ணை போலீசார் பிடித்து விசாரித்ததில் அந்த பெண்ணிற்கும் சக்கரபாணிக்கும் முறையற்ற உறவு இருந்ததும், இதனை பெண்ணின் கணவரின் தம்பி வசீம் பாஷா கண்டித்ததும் இதனால் சக்கரபாணிக்கும் வசீம் பாஷாவுக்கும் மோதல் ஏற்பட்டதும் தெரியவந்தது. மோதலில் சக்கரபாணியை கொலை செய்து உடலை 6 துண்டுகளாக வெட்டி தலையை அடையாறு திருவிக பாலத்தில் இருந்து ஆற்றில் தூக்கி எறிந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

 

 Body cut into 6 pieces ... Head thrown at Adyar ...  DMK executive incident

 

6 துண்டுகளாக வெட்டப்பட்ட உடலையும் அதேபோல் ஆற்றில் வீச வைத்திருந்த நிலையில், கொலையாளிகள் போலீசார் வசம் சிக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் சக்கரபாணியுடன் முறையற்ற தொடர்பில் இருந்த தமின்மானு, வசீம் பாஷா ஆகிய இருவரையும் கைது செய்துள்ள போலீசார் டில்லி பாபு என்ற ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

 

 Body cut into 6 pieces ... Head thrown at Adyar ...  DMK executive incident

 

காணாமல் போன திமுக நிர்வாகி 6 துண்டுகளாக வெட்டப்பட்டு தலை ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் ராயபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.