Skip to main content

பல கோடி ரூபாய் சுருட்டிய பா.ஜ.க. பிரமுகர்; குவியும் புகார்கள்! 

Published on 21/08/2022 | Edited on 21/08/2022

 

bjp leader money peoples police salem


 
 சேலத்தில், நிதி நிறுவனம் என்ற பெயரில் கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டு பல கோடி ரூபாய் சுருட்டிய பா.ஜ.க. பிரமுகர் மீது மேலும் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. விரைவில் அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். 

 

சேலம் அழகாபுரம் ரெட்டியூரைச் சேர்ந்தவர் ஏ.பி.பாலசுப்ரமணியம். இவர், புதிய பேருந்து நிலையம் அருகே ஜஸ்ட் வின் ஐடி டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தார். இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் செயல்பட்டு வந்தார்.   

 

இவருடைய மனைவி தனலட்சுமி, மகன் வினோத், மருமகன் கதிர்வேல் ஆகியோரும் நிர்வாகம் செய்து வந்தனர். சேலத்தைத் தலைமை இடமாகக் கொண்டு திருவண்ணாமலை, காரைக்குடி, தலைவாசல், ஈரோடு, சென்னை, நீலகிரி ஆகிய இடங்களிலும் கிளைகளைத் தொடங்கியுள்ளனர்.  

 

இந்த நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 12 மாதங்கள் கழித்து 1.60 லட்சம் ரூபாயாக திருப்பித் தரப்படும் என கவர்ச்சிகரமான விளம்பரம் செய்யப்பட்டது. இதை நம்பிய பலர், பல கோடி ரூபாய் முதலீடு செய்தனர். இதற்காக முகவர்களை நியமித்து, அவர்கள் மூலமும் கோடிக்கணக்கான ரூபாய்கள் முதலீடாகப் பெறப்பட்டது.  

 

ஆரம்பத்தில் சிலருக்கு உறுதி அளித்தபடி முதலீட்டுத் தொகையை கூடுதல் லாபத்துடன் கொடுத்து வந்த இந்நிறுவனம், அதன்பின் முதலீட்டுத் தொகையைக் கூட திருப்பித்தராமல் போக்கு காட்டி வந்தது.  ஏமாற்றம் அடைந்த பலர் சேலம் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர். 

 

இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டியைச் சேர்ந்த காவேரியப்பன் என்பவர் அளித்த புகாரின்பேரில், பாலசுப்ரமணியம், மனைவி தனலட்சுமி, மகன் வினோத், மருமகன் கதிர்வேல் ஆகியோர் 37 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக அழகாபுரம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.  

 

இந்த வழக்கில் அவரைப் பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர். ஆக. 19- ஆம் தேதி, சென்னையில் வைத்து பாலசுப்ரமணியம், அவருடைய மனைவி தனலட்சுமி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் நீதிமன்ற உத்தரவின்பேரில் இருவரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். வினோத், கதிர்வேல் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  

 

இது ஒருபுறம் இருக்க, இவர்கள் மீது மேலும் இரண்டு புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.  
 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.