குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னெடுப்புகளை குடியரசுத் தலைவர் வேட்பாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா நேற்று முன்தினம் தமிழகம் வந்திருந்த நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்மு இன்று தமிழகம் வருகை புரிந்துள்ளார். சென்னை வந்துள்ள திரௌபதி முர்மு நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாஜக கூட்டணிக் கட்சி தலைவர்களைச் சந்தித்தார்.
அதிமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், தேமுதிக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரௌபதி முர்முவை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.