Skip to main content

பிரியாணி திருவிழா: விளக்கம் கேட்டு நோட்டீஸ்! 

Published on 12/05/2022 | Edited on 12/05/2022

 

Biryani Festival: Notice asking for explanation!

 

ஆம்பூர் பிரியாணிக்கு அறிமுகம் தேவையில்லை. ஆம்பூர் பிரியாணிக்கு புவிசார் குறியீடு பெற மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா முயற்சி செய்து வரும் நிலையில், முதன்முறையாக பிரியாணி திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. ஆம்பூர் வர்த்தக மையத்தில் மே 13- ஆம் தேதி முதல் மே 15- ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் பிரியாணி திருவிழாவில் 50 கடைகளும் 30 வகையான பிரியாணிகளும் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு 36 கடைகள் முன்பதிவு செய்தனர். கோழி மற்றும் ஆட்டிறைச்சி பிரியாணி கடைகளுக்கு மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. 

 

ஆம்பூரில் நாள்தோறும் 4,000 கிலோ மாட்டிறைச்சி பிரியாணி விற்பனை செய்யப்பட்ட போதிலும், பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆம்பூர் வர்த்தக மைய வளாகத்திற்கு வெளியே இலவசமாக மாட்டிறைச்சி பிரியாணி வழங்கப்படும் என்று தலித் கூட்டமைப்பினர் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பினர் அறிவித்தனர். 

 

ஆர்ப்பாட்டம் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.வடமாநிலங்களைப் போல தமிழ்நாட்டிற்குள் உணவு அரசியலை நுழைய ஆம்பூர் பிரியாணி திருவிழா இடம் கொடுக்கக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் வலியுறுத்தினர். 

 

சர்ச்சைக்கு இடையே மழை காரணமாக, ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா அறிவித்தார். அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை என வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார். 

 

இந்த நிலையில், ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக, விளக்கம் கேட்டு மாநில பட்டியலினத்தவர் நல ஆணையம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாட்டிறைச்சி பிரியாணி மறுக்கப்பட்டது தீண்டாமை செயல் என்று புகார் கூறப்படுவதாக ஆணையம் தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைப்பு! 

Published on 12/05/2022 | Edited on 12/05/2022

 

Ambur Biryani Festival Postponed!

 

வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகரில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மே 13, 14, 15  என மூன்று நாட்கள் ஆம்பூர் வர்த்தக மையத்தில் பிரியாணி திருவிழா நடக்கிறது.

 

ஆம்பூர் நகரில் மட்டும் சிறியதும், பெரியதுமாக சுமார் 100 பிரியாணி ஹோட்டல்கள் உள்ளன. சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, நாட்டுக்கோழி பிரியாணி, மாட்டுக்கறி பிரியாணி, முயல் பிரியாணி விற்பனை செய்யப்படுகின்றன. இங்குள்ள 100 ஹோட்டல்களில் சரிபாதி மாட்டுக்கறி பிரியாணி ஹோட்டல்கள். மாவட்ட நிர்வாகம் நடத்தும் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி இல்லை என்பது உணவு பிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இது குறித்து தலித் அமைப்புகள், இஸ்லாமிய அமைப்புகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அமர் குஷ்வாவை நேரில் சந்தித்து மாட்டுக்கறி  பிரியாணி சாப்பிடுபவர்கள் அதிகளவில் உள்ளனர். அதனால் அதனையும் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

 

அரசின் சார்பில் நடத்தப்படும் பிரியாணி திருவிழாவில், மாட்டுக்கறி பிரியாணிக்கு இடமில்லை எனச் சொல்லி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் நாளை தொடங்கவிருக்கும் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணியை அனுமதிக்காவிடில் இலவசமாக தருவோம் என கோரிக்கை வைத்த அமைப்புகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், ஆம்பூரில் அரசு சார்பில் நாளை (13/05/2022) நடைபெறவிருந்த பிரியாணி திருவிழா கனமழை எச்சரிக்கை காரணமாக, தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா அறிவித்துள்ளார்.