Skip to main content

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு... தாயுடன் சேர்ந்து மாமியாரை கொன்ற மருமகள்!

Published on 24/10/2019 | Edited on 24/10/2019

காதல் திருமணத்திற்குப் பிறகு மருமகளை மாமியார் காதல் திருமணத்தை காட்டி அடிக்கடி பிரச்சனை செய்ததால்  மருமகள் மாமியாரை தாயுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரை அடுத்த காங்கேயத்தில் உள்ள உத்தண்டகுமாரவலசு கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்கொடி. நாகேந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பூங்கொடி. பூங்கொடியின் தாயான கண்ணம்மா மற்றும் நாகேந்திரன், பூங்கொடி ஆகிய 3 பேர் மீதும் ஏற்கனவே மதுரை பைனான்சியரையும் அவரது மனைவியும் கொலைசெய்து வீட்டில் புதைத்த வழக்கு  பதிவாகி அந்த வழக்கில் அவர்கள் கோவை சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளனர். 

 

incident in thirupur.. police investigation


இந்த நிலையில் பூங்கொடியும் அவரது தாய் கண்ணம்மாவும் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு ஐந்து மாதத்திற்கு முன்பு  பூங்கொடியின் மாமியார் அதாவது நாகேந்திரன் என் தாயை கொலை செய்த அதிர்ச்சித் தகவலும் தற்பொழுது வெளியாகி உள்ளது. நாகேந்திரன் பூங்கொடியை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் இவர்களது காதல் திருமணம் நாகேந்திரன் தாயான ராஜாமணிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பூங்கொடியை ராஜாமணி அடிக்கடி திட்டியதாகவும் பிரச்சனை செய்ததாகவும் கூறப்படுகிறது. காதல் திருமணம் செய்து கொண்டதற்காக மாமியார் தன்னை கொடுமைப்படுத்துவதை நாளுக்கு நாள் தாங்கிக் கொண்ட பூங்கொடி இது குறித்து அவரது தாயான கண்ணம்மாவிடம் கூறி அழுதுள்ளார்.

 

incident in thirupur.. police investigation


இந்நிலையில் காதல் திருமணம் செய்துகொண்ட நாகேந்திரன் போதைக்கு அடிமையானதால் அவரும் போதை மறுவாழ்வு சிகிச்சைக்கு பெங்களூருவில் உள்ள அவரது பெரியம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். கணவன் இல்லாத சூழலில் மாமியார் கொடுத்த வேலைகளை இழுத்துப் போட்டு செய்த பூங்கொடி தங்கள் ஊரில் திருவிழா நடைபெறுவதாகவும் அதற்கு மாமியார் வரவேண்டும் என கடந்த 5 மாதங்களுக்கு முன்பு விருந்துக்கு அழைத்துள்ளார். விருந்துக்கு வீட்டிற்கு வந்த மாமியாருக்கு மயக்க மருந்து கொடுத்த பூங்கொடி தனது தாய் கண்ணம்மா உடன் சேர்ந்து கொலைசெய்து ராஜாமணி உடலை வீட்டு தோட்டத்தில் புதைத்து அதன் மேல் செடி வைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது .

 

pp

 

நாகேந்திரன் பெங்களூருவிலிருந்து சிகிச்சை பெற்று திரும்பியபோது அம்மா எங்கே என்று கேட்டபோது அவரை காணவில்லை என நாடகமாடி உள்ளார் பூங்கொடி. அவரும் இதுதொடர்பாக அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து இதுகுறித்து மாயமான வழக்கு தானே என்று கிடப்பில் போலீசார் போட்டுள்ளனர்.

 

incident in thirupur.. police investigation


இந்நிலையில் தனது சொந்த அண்ணன் செல்வராஜ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரை இதே பாணியில் உணவில் விஷம் வைத்து கலந்து கொடுத்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விசாரணையின்போது ஐந்து மாதங்களுக்கு முன்பே மாமியாரை கொலை செய்ததும் தெரியவந்தது. அதனை அடுத்து ராசாமணி புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்ற போலீசார் அவரது உடலை தோண்டி எடுத்து ரசாயன பரிசோதனைக்கு அனுப்பும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

அதேபோல் தனது மனைவியும், அவரது தாயும் ஒன்று சேர்ந்து  என்  அம்மாவை கொன்றது தனக்கு தெரியாது என்று காவல்துறையிடம் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.