Skip to main content

ஒரு டிக் டாக் வீடியோ...!! இரு உயிர்பலி...!!-திருத்தணியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Published on 04/07/2019 | Edited on 04/07/2019

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே டிக் டாக்கில் ஒரு சமூகத்தை இழிவுபடுத்தி பேசி வீடியோ வெளியிட்ட நண்பர்கள் இறுதியில் உயிரை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

bad incident reason of tik tak in thiruthani!!


திருத்தணியை அடுத்த தாளவேடு கிராமத்தில் வெங்கட்ராமன் என்ற இளைஞர் அவரது நண்பர் விஜயன் என்பவருடன் சேர்ந்து வேறு சமூகத்தை குறித்து அவதூறாக டிக் டாக்கில் வீடியோ எடுத்து இருவரும் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ என்னமாதிரியான விளைவுகளை உருவாக்கும் என சிறிதும் யோசிக்காமல் அந்த வீடியோ வெளியாகியது. சமூகவலைதளத்தில் பரவிய அந்த வீடியோ குறிப்பிட்ட சமூகத்தினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்த இது குறித்து அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த சமூகத்தினர் கடந்த பிப்ரவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து திருத்தணி போலீசார் வீடியோ வெளியிட்ட வெங்கட்ராமன், விஜயன் என இருவரையும் தேடிவந்தனர்.

bad incident reason of tik tak in thiruthani!!


இந்நிலையில் அந்த இருவரும் போலீசாரிடம் தப்பித்து மறைந்திருந்த நிலையில், பிப்ரவரி மாத இறுதியில் இருவரும் கூட்டாக மது அருந்தி கொண்டிருந்த பொழுது வீடியோ பதிவிட்டது தொடர்பாக கூட்டாளிகளுக்கு இடையே வாக்குவாதம் நடைபெற்று. இறுதியில் ஆத்திரத்தில் வெங்கட்ராமன் துண்டால் விஜயனின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். மேலும் திருத்தணி போலீசாரிடம் சென்று கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் வெங்கட்ராமன். 

bad incident reason of tik tak bad incident reason of tik tak

அதன்பின் கடந்த மாதம் 17 ஆம் தேதி ஜாமீனில் வெளிவந்த வெங்கட்ராமன் திருத்தணி காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டுவந்தார். டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டது, அது தொடர்பாக நண்பரை கொலை செய்தது என இந்த வழக்கில் கிடைக்கப்போகும் தண்டனைகள் தொடர்பாக பயத்தில் இருந்த வெங்கட்ராமன் கடந்த செவ்வாய் கிழமை காவல்நிலையத்தில் கையெழுத்திட்ட பிறகு  கார்த்திகேயபுரத்தில் உள்ள ஒரு ஏரியில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்படி ஒரு டிக் டாக் வீடியோ பதிவு இரு உயிரை பறிக்கும் நிலைக்கு போயிருக்கும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

bad incident reason of tik tak


டிக் டாக் செயலி தனி திறமைகளை வெளிக்காட்டும் ஊடகமாக இருந்தாலும் பல நேரங்களில் இது பல பிரச்சைனைகளையும், பூசல்களையும் உருவாக்கும் இடமாகவே இருக்கிறது. அண்மையில் பொன்னமராவதியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக எழுந்த சர்ச்சைகள் இறுதியில் கைது நடவடிக்கை, 144 தடை என பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல் டிக் டாக்கில் மூழ்கி குழந்தையை கவனிக்காததால் கணவன் திட்டியதற்காக டிக் டாக்கிலேயே பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பள்ளி ஆசிரியர் விடிய விடிய சுமுல் ஆப்பில் பாட்டு பாடிவிட்டு பள்ளிக்கு சரியாக வராமல் போனது என சமூக ஊடகத்தினை தவறாகவும், அதிகமாகவும் பயன்பத்துவதால் நடக்கப்போவது இன்னும் எத்தனை எத்தனையோ...   

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.