Skip to main content

ஒரு டிக் டாக் வீடியோ...!! இரு உயிர்பலி...!!-திருத்தணியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Published on 04/07/2019 | Edited on 04/07/2019

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே டிக் டாக்கில் ஒரு சமூகத்தை இழிவுபடுத்தி பேசி வீடியோ வெளியிட்ட நண்பர்கள் இறுதியில் உயிரை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

bad incident reason of tik tak in thiruthani!!


திருத்தணியை அடுத்த தாளவேடு கிராமத்தில் வெங்கட்ராமன் என்ற இளைஞர் அவரது நண்பர் விஜயன் என்பவருடன் சேர்ந்து வேறு சமூகத்தை குறித்து அவதூறாக டிக் டாக்கில் வீடியோ எடுத்து இருவரும் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ என்னமாதிரியான விளைவுகளை உருவாக்கும் என சிறிதும் யோசிக்காமல் அந்த வீடியோ வெளியாகியது. சமூகவலைதளத்தில் பரவிய அந்த வீடியோ குறிப்பிட்ட சமூகத்தினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்த இது குறித்து அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த சமூகத்தினர் கடந்த பிப்ரவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து திருத்தணி போலீசார் வீடியோ வெளியிட்ட வெங்கட்ராமன், விஜயன் என இருவரையும் தேடிவந்தனர்.

bad incident reason of tik tak in thiruthani!!


இந்நிலையில் அந்த இருவரும் போலீசாரிடம் தப்பித்து மறைந்திருந்த நிலையில், பிப்ரவரி மாத இறுதியில் இருவரும் கூட்டாக மது அருந்தி கொண்டிருந்த பொழுது வீடியோ பதிவிட்டது தொடர்பாக கூட்டாளிகளுக்கு இடையே வாக்குவாதம் நடைபெற்று. இறுதியில் ஆத்திரத்தில் வெங்கட்ராமன் துண்டால் விஜயனின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். மேலும் திருத்தணி போலீசாரிடம் சென்று கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் வெங்கட்ராமன். 

bad incident reason of tik tak bad incident reason of tik tak

அதன்பின் கடந்த மாதம் 17 ஆம் தேதி ஜாமீனில் வெளிவந்த வெங்கட்ராமன் திருத்தணி காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டுவந்தார். டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டது, அது தொடர்பாக நண்பரை கொலை செய்தது என இந்த வழக்கில் கிடைக்கப்போகும் தண்டனைகள் தொடர்பாக பயத்தில் இருந்த வெங்கட்ராமன் கடந்த செவ்வாய் கிழமை காவல்நிலையத்தில் கையெழுத்திட்ட பிறகு  கார்த்திகேயபுரத்தில் உள்ள ஒரு ஏரியில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்படி ஒரு டிக் டாக் வீடியோ பதிவு இரு உயிரை பறிக்கும் நிலைக்கு போயிருக்கும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

bad incident reason of tik tak


டிக் டாக் செயலி தனி திறமைகளை வெளிக்காட்டும் ஊடகமாக இருந்தாலும் பல நேரங்களில் இது பல பிரச்சைனைகளையும், பூசல்களையும் உருவாக்கும் இடமாகவே இருக்கிறது. அண்மையில் பொன்னமராவதியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக எழுந்த சர்ச்சைகள் இறுதியில் கைது நடவடிக்கை, 144 தடை என பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல் டிக் டாக்கில் மூழ்கி குழந்தையை கவனிக்காததால் கணவன் திட்டியதற்காக டிக் டாக்கிலேயே பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பள்ளி ஆசிரியர் விடிய விடிய சுமுல் ஆப்பில் பாட்டு பாடிவிட்டு பள்ளிக்கு சரியாக வராமல் போனது என சமூக ஊடகத்தினை தவறாகவும், அதிகமாகவும் பயன்பத்துவதால் நடக்கப்போவது இன்னும் எத்தனை எத்தனையோ...   

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.