Skip to main content

குழந்தை விற்பனை இப்படித்தான் நடக்கிறதா?-அதிர்ச்சியை ஏற்படுத்தும் குழந்தை விற்பனை!! 

Published on 09/02/2020 | Edited on 10/02/2020

நாம் உண்ணும் உணவுப் பழக்கத்தில் ஏற்பட்ட மாறுபாட்டினால் குழந்தை குழந்தையின்மை என்கிற பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் குழந்தைகளை விலைகொடுத்து விற்பனை செய்யும் ப்ரோக்கர் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது .

இதனால் தமிழக அரசு குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு என்று ஒரு தனி அமைப்பை மாவட்டம் தோறும் ஏற்படுத்தி குழந்தைக் கடத்தலை தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் இருந்தாலும் குழந்தை விற்பனையில் லட்சக்கணக்கில் பணம் கிடைப்பதால் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

 

 Is baby sales going like this?

 

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் காமராஜர் தெருவை சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மனைவி அஸ்வினி திருட்டு குழந்தையை வாங்கி வளர்ப்பதாக மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு வந்த புகாரின்  அடிப்படையில் பிறந்த விசாரணையில் பிறந்த 3 மாதத்திற்கு முன்பு திருவள்ளூர் பகுதியில் உள்ள புரோக்கர் ஒருவர் மூலம் ஒரு லட்சம் கொடுக்கும் ஆண் குழந்தையை விலைக்கு வாங்கியதாக இதனுடைய உண்மையான பெற்றோர் புவனேஸ்வரி கிருஷ்ணர் என்றும் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு பணத்தை கொடுத்து குழந்தையின் பிறப்பை கொடுத்ததாக வாக்குமூலம் கொடுத்தனர்.


முறையற்ற முறையில் திருட்டுத்தனமாக குழந்தையை விற்ற அந்த புரோக்கர் தற்போது தலைமறைவாகி விட்டதால் குழந்தை எங்கிருந்து வந்தது என்று தெரியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இதேபோன்று உப்பிலியாபுரம் பகுதியை சார்ந்த திருமணத் தம்பதிகளுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை ஒன்று விற்பனை செய்திருப்பதாக தகவல் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ஒரு இதுகுறித்த விசாரணையில் ....

தர்மராஜ் ராணி தம்பதிகளுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ராணி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். உப்பிலியாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவுசெய்து அதை தன் உறவினர்கள் யாரிடமும் சொல்லாமல் திருச்சி திருவெறும்பூர் பகுதியில் அரசங்குடி சித்தாள் வேலைக்கு வந்தார்.

இங்கு வேலை செய்த போது ஷீலா என்பவருடன் பழக்கமாகி அவருடன் தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்றுள்ளார். கடந்த 25 நாட்களுக்கு முன்பு ராணி பிரசவ வலி ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது பிறந்த நான்காவது நாளில் துறை சார்ந்த தம்பதிகளுக்கு ராணியின் தாய் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொண்டார்.

அதேநேரத்தில் அரசு மருத்துவமனையில் குழந்தையின் பெற்றோர் ராணி தர்மராஜ் என்பதற்கு பதிலாக சிவகாமி பாலசுப்ரமணியன் என்று பதிவு செய்திருப்பதை கண்டுபிடித்த போலீசார் இதை வைத்து  விசாரணையில் இறங்கினர் ஷீலா என்பவர் ராணிக்கு பிறந்த குழந்தையை தனது உறவினர் சிவகாமி பாலசுப்பிரமணியன் தம்பதிக்கு கொடுக்க திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் ராணியின் தாயார் வேறு ஒருவருக்கு குழந்தையை ஒரு லட்ச ரூபாய்க்கு பேரம் பேசியதால் கடுப்பான ஷீலா காவல்துறைக்கு தகவல் கொடுத்ததால் இந்த குழந்தை விற்பனை விவகாரம் வெளியே வந்தது. இந்த இரு சம்பவங்களும் திருச்சியிலிருந்து இருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.