Skip to main content

500 கிராம் எடையில் குறைமாதத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்... அரசு மருத்துவர்கள் சாதனை

Published on 05/10/2019 | Edited on 05/10/2019

இந்தியாவிலேயே குறைந்த எடையில் வெறும் 500 கிராமில் குறைமாதத்தில் பிறந்துள்ள குழந்தையை மிக சாதுர்யமாக செயல்பட்டு காப்பாற்றியிருக்கிறார்கள் அரசு மருத்துவர்கள்.
 

baby

 

 


145 நாட்கள் பாதுகாத்து இரண்டு கிலோ 200 கிராம் எடையுடன் அந்த குழந்தையை தாயிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை உண்டாக்கிவருகிறது.

நாகப்பட்டினத்தில் உள்ள சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்வமணி, லதா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 2018ம் ஆண்டு செப் 21ம் தேதி திருமணம் ஆனது. லதாவிற்கு முதல் கருத்தரிப்பு கலைந்துப்போன நிலையில் 2 வதாக குழந்தை உருவாகி, பிரசவத்திற்காக மே மாதம் 10ம் தேதி, நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். சுக பிரசவத்தில் 580 கிராம் மட்டுமே எடையுடைய பெண் குழந்தை பிறந்ததோடு, எவ்வித அசைவும் இல்லாமல் இருந்ததால் குழந்தை இறந்து பிறந்துள்ளதாக மருத்துவர்களும் உறவினர்களும் கருதி சோகத்தின் உச்சத்திற்கு ஆளாகினர்.

அப்போது பணியில் இருந்த மகப்பேறு மருத்துவர் ஒருவர் செயற்கை சுவாச கருவி வாயிலாக முயற்சித்துப்பார்க்கலாம் என  குழந்தையை , வென்டிலேட்டர், செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டு ‘பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவுக்கு மாற்ற செய்தார். அங்கு குழந்தை மருத்துவர் மற்றும் செவிலியர்களின் 24 மணி நேரம் தீவிர கண்காணிப்பில், ஒவ்வொரு நொடியும் குழந்தையின் மாற்றத்தை கணக்கில் கொண்டு தீவிர சிகிச்சை அளித்தனர். 145 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருந்த குழந்தை 2 கிலோ 200 கிராம் எடையுடைய துரு துரு குழந்தையாக வளர்ந்ததை கண்டு அனைவரும் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

இதுகுறித்து நாகை குழந்தை மருத்துவர் ஜெயச்சந்திரனும், 145 நாட்கள் குழந்தையின் தாயாக இருந்து பராமரித்த செவிலியர் சத்யாவும் கூறுகையில் ," 580 கிராம் உடைய குழந்தைக்கு மூச்சு விடுதல், விழுங்குதல் போன்ற எதுவும் தெரியாது. அக்குழந்தைக்கு செயற்கை முறையில் சிகிச்சை அளிப்பதை ஒரு சவாலாகவே எடுத்துக்கொண்டோம். 24 மணி நேரமும் அந்த குழந்தையை எங்கள் குழந்தையைபோல நினைத்து அந்த குழந்தை மீது தனி கவனம் செலுத்தினோம். தற்போது குழந்தை முழு சுகம் பெற்று வீடு திரும்புவது மகிழ்ச்சியளிக்கிறது, எங்கள் உழைப்புக்கு கிடைத்த மகத்தான பலன்," என்கிறார்கள்.
 

baby

 

 

மேலும் செவிலியர்கள் கூறுகையில், "குறை மாதத்தில் பிறந்த குழந்தை என்பதால், நிம்மதி இல்லாமல் இருந்தோம் ஆனால், மருத்துவர்கள் காப்பாற்றி விட்டார்கள். அவர்களுக்கு எங்களால் முடிந்த முழு ஒத்துழைப்பைக்கொடுத்தோம், இப்போது ஏதோ சாதித்துவிட்டதைப்போலவே நிம்மதி அடைகிறோம்," என்று நெகிழ்ச்சியோடு கூறுகிறார்.

குழந்தையின் தாய் லதா கூறுகையில், "இந்தியாவிலேயே உடல் எடை குறைவாக குறை மாத பிரசவத்தில் காப்பாற்றப்பட்ட மூன்றாவது குழந்தைன்னு என்னோட குழந்தைன்னு சொல்லுறாங்க. அதுவும் அரசு மருத்துவமனையில் நடந்திருப்பதுதான் எங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. இந்த சாதனையை ஒருபோதும் மறக்கமாட்டேன்" என்கிறார்கள். குழந்தையை காப்பாற்றிய அரசு மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'உங்கள் குழந்தை செர்லாக் பேபியா?' -எச்சரிக்கை மணி அடித்த உலக சுகாதார அமைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Is your child a Cerelac baby?'-World Health Organization has sounded the alarm

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான செர்லாக் என்பது ஊட்டச்சத்து உணவு எனப் பொதுவாக குழந்தைகளுக்கு கொடுக்கும் பழக்கம் இந்தியாவில் நீண்ட நெடும் காலமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'நெஸ்லே' நிறுவனம் இந்தியாவில் பல்லாயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து வருகின்ற நிலையில், நெஸ்லேவின் குறிப்பிடத் தகுந்தத் தயாரிப்பில் ஒன்றாக உள்ளது செர்லாக்.

இந்தநிலையில் IBFAN எனப்படும் Baby Food Action Network என்ற ஐரோப்பிய அமைப்பு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்கப்படும் செர்லாக் எனும் குழந்தைகளுக்கான  ஊட்டச்சத்து உணவை ஆய்வு செய்தது. ஊட்டச்சத்து பொருள் என்று கூறப்படும் செர்லாக்கில் சுவைக்கு அடிமையாக்கி அடிக்கடி உண்ண வைக்கும் அடிக்டிவ் சுகர் என்பது சேர்க்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது நெஸ்லேவின் முக்கிய சந்தையாக கருதப்படும் பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகர் சேர்க்கப்படவில்லை. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில் மட்டும் அடிக்டிவ் சுகர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் செர்லாக்கை  குழந்தைக்கு ஒரு முறை ஊட்டுகையில் 2.2 சதவீதம் அடிக்டிவ் சுகர் குழந்தையின் உடலுக்கு செல்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்தியாவை விட எத்தியோப்பியா போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகரின் அளவு 5.2 கிராமாக உள்ளது. நெஸ்லேவின் இந்தச் செயல்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வருவதற்கும், குழந்தைகள் பார்ப்பதற்கு அளவுக்கு மீறி குண்டாக இருப்பதற்கும் இவையே காரணம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.