Skip to main content

மாணவிகள் மீதான பாலியல் சீண்டல்..! -ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு!

Published on 07/12/2021 | Edited on 07/12/2021

 

Awareness for teachers!

 

மாவட்ட முழுக்க உள்ள கல்வி நிலைய நிர்வாகிகளை அழைத்து மாணவ, மாணவிகள், குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் ரீதியான தொந்தரவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் ஐ.பி.எஸ்.அவர்கள் தலைமையில் 7 ந் தேதி வேளாளர் மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

 

இதில் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி. ஆ.கனகேஸ்வரி மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபி மற்றும் சக்தி ஆகிய ஐந்து கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த கல்வி அலுவலர்கள், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

 

erode

 

கூட்டத்தில், குழந்தைகள் மீதான பாலியல் தொந்தரவுகள், பாலியல் தாக்குதல்கள் குழந்தை திருமணங்கள் குறித்தும் இவற்றை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் குறிப்பாக சமீபகாலமாகப் பள்ளி குழந்தைகளுக்குப் பள்ளி ஆசிரியர்களால் ஏற்படும் பாலியல் வன்முறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு அதுகுறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு  ஏற்படுத்தப்பட்டது. POCSO Act மற்றும் Juvenil Justice Act குறித்தும், பள்ளிகளில் Students safeguarding: Advisory committee அமைப்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பள்ளி நிர்வாகிகள் கவனத்திற்கு வரும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு குறித்தும் குழந்தை திருமணம் பற்றியும் உடனடியாக காவல்துறைக்கும், ஈரோடு மாவட்ட காக்கும் கரங்கள் WhatsApp என் 9655220100 க்கும் மற்றும் Childline No. 1098 உடனடியாக தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் இந்த விழிப்புணர்வினை தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் அனைத்து இதர ஆசிரியர்களுக்கும் மற்றும் மாணவ, மாணவிகளுக்கும் எடுத்துரைக்க வேண்டுமென மாவட்ட எஸ்.பி. சசிமோகன் கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

முற்றுகைக்கு ரெடியான நிர்வாகி கைது; தொடரும் கீழ்பவானி வாய்க்கால் நீர் திறப்பு பேச்சுவார்த்தை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Executive arrested for siege; Negotiations on the opening of water by the Kilpawani canal continue

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்தில் 5-வது நினைப்புக்கு ஏப்ரல் 18ஆம் தேதி முதல் 13 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால் இந்த 5வது நினைப்புக்கு தண்ணீர் திறப்பது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிடாததால் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் இதுவரை அறிவிப்பு வெளியிடாததால் நேற்று காலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கீழ்பவானி வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவியை சென்னிமலை போலீசார் அவர் வீட்டில் இருந்து கைது செய்து சென்னிமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்திருந்தனர். இதையடுத்து கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் சுதந்திர ராசு, வெங்கடாசலம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் சென்னிமலையில் குவிந்தனர். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 5வது இணைப்புக்கு தண்ணீர் திறப்பது குறித்து வரும் 20 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி, சுமூக முடிவு எட்டப்படும் எனத் தெரிவித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி விடுவிக்கப்பட்டார்.