Skip to main content

தலைமையாசிரியர் தலைமையில் நடைபெற்ற மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Published on 27/11/2021 | Edited on 27/11/2021

 

Awareness program for students led by the headmaster

 

சமீப காலமாக பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்துவருகின்றன. இதைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்திவருகிறது. வக்கிர எண்ணம்கொண்ட சில ஆண்களால் பாதிப்புக்குள்ளாகும் மாணவிகள், அதனைப் போன்றவர்கள் தவறு செய்ய முனைந்தால் அது சம்பந்தமான புகார்களைத் துணிவுடன் காவல்துறைக்கும், பெற்றோர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். மேலும், மாணவிகள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தங்களிடம் நெருங்கிப் பேசும் ஆண்கள் எந்த நோக்கத்திற்காக பேசுகிறார்கள், அவர்கள் தங்கள் மீது கை வைத்துப் பேச முற்படும்போது அதைத் தடுக்க வேண்டும்.

 

துணிவுடன் அவர்களை எதிர்த்து கேட்க வேண்டும். பயந்த மனப்பான்மையுடன் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அப்படிப்பட்ட ஆண்கள் துணிந்து தவறு செய்ய முனைவார்கள். இப்படி கொடூர மனம் படைத்த ஆண்களிடமிருந்து எப்படி பிழைக்க வேண்டும். அவர்களிடம் எப்படி பேச வேண்டும்? எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்பதற்காக தமிழ்நாடு அரசு பள்ளி கல்லூரிகளில், ஆசிரியர்கள், காவல்துறையினர், குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் உள்ளிட்டோரை அழைத்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. 

 

அதன்படி கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளைத் தனிமனித இடைவெளியுடன் அமரவைத்து அவர்களுக்குத் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளை விளக்கினர். மேலும், தவறான கண்ணோட்டத்துடன் மற்ற ஆண்கள் அவர்களுடன் நடந்துகொள்ளும்போதும் அவர்களது செயல்முறைகளை எப்படி கண்டறிவது, அதிலிருந்து எப்படி விடுபடுவது என எடுத்துக் கூறினர். இதுபோன்ற செயல்பாடுகளைப் பள்ளி தலைமையாசிரியர்கள், காவல்துறை, பெற்றோர்கள் ஆகியோருக்கு எப்படி தெரிவிப்பது, மாணவிகள் இக்கட்டான சூழ்நிலையில் காவல்துறை அளித்துள்ள செல்ஃபோன் எண்ணுக்குத் தகவல் பரிமாற்றம் செய்வது போன்ற பல்வேறு விதமான விழிப்புணர்வு கருத்துகளைக் கூறி மாணவிகளின் மனதில் பதிவுசெய்தனர்.

 

இந்த நிகழ்ச்சியானது பள்ளித் தலைமை ஆசிரியர் ரமணி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திட்டக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்துரு, கேர் இந்தியா நிறுவனத்தின் சார்பில் ஜோசப் ஜான்சன், ஆசிரியர்கள் புவியரசி, செண்பகவல்லி, மணிகண்டன் உட்பட பல்வேறு ஆசிரியர்கள் விழிப்புணர்வு குறித்து மாணவிகளிடம் விவரித்துக் கூறினார்கள். மாணவிகளும் அதிக அளவில் கலந்துகொண்டு மிகவும் ஆர்வமுடன் விழிப்புணர்வுக் கருத்துகளைக் கேட்டறிந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.