Skip to main content

பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி! 

Published on 22/10/2021 | Edited on 22/10/2021

 

Awareness program for school students and teachers!

 

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன் மாணவர் ஒருவரை ஆசிரியர் வகுப்பறையில் தாக்கும் வீடியோ காட்சி வைரலாகியது. இதனைத் தொடர்ந்து சம்பந்தபட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

இந்நிலையில், அப்பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில், கடலூர் மாவட்ட காவல்துறை சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் அசோகன், உதவி ஆய்வாளர் லூயிஸ்ராஜ் உள்ளிட்ட காவல்துறையினர் கலந்துகொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் தனித்தனியாக பள்ளியில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும். தற்போது உள்ள சட்டமுறைகள் என்ன என்பது குறித்து விளக்கி பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

 

மேலும், பள்ளிக்குள் மாணவர்கள் செல்ஃபோன் எடுத்துவருவதை தடுக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் பல இடங்களில் விழிப்புணர்வு பேனர் வைக்க வேண்டும். மாணவர்களின் பெற்றோர்களை மாதம் ஒருமுறை பள்ளிக்கு அழைத்து, மாணவர்களின் நடவடிக்கைகள் குறித்து விளக்கி கூற வேண்டும். மாணவர்களிடம் ஆசிரியர்கள் உளவியல் ரீதியாக அவர்களின் குறைகளை எடுத்துக்கூறி திருத்த வேண்டும் என்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் குகநாதன் உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர் - ஆசிரியர்கழக தலைவர் ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர்கள் பாலமுருகன், கலியமூர்த்தி சகஜானந்தா மணிமண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

சிதம்பரத்தில் இ.பி.எஸ். பிரச்சாரம்; பொதுக்கூட்ட பணிகள் தீவிரம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Edappadi Palaniswami is campaigning in Chidambaram on 31st

சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறார். அதேபோல் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் கார்த்தியாயினி போட்டியிடுகிறார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் வேட்பாளர் சந்திரகாசன் போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு கேட்டு வரும் 31 ஆம் தேதி சிதம்பரம் புறவழிச் சாலை பகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதனையொட்டி பொதுக்கூட்டம் மேடை அமைப்பதற்காகப் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிதம்பரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழி தேவன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.