Skip to main content

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கும் விழா! 

Published on 31/07/2022 | Edited on 31/07/2022

 

Awards ceremony on behalf of the Liberation Tigers Party!

கடந்த 2007- ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சமூகம், அரசியல், பண்பாடு, கலை, இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு ‘அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு' உள்ளிட்டப் பெயர்களில் விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது. இந்தாண்டு கூடுதலாக மார்க்ஸ் மாமணி விருது வழங்கப்படும் என ஏற்கனவே
அறிவிக்கப்பட்டுள்ளது.

Awards ceremony on behalf of the Liberation Tigers Party!

அந்த வகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் வெ.நாராயணசாமி, பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் தோழர் இரா.நல்லக்கண்ணு, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 84 சான்றோருக்கு இதுவரை இவ்விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.

Awards ceremony on behalf of the Liberation Tigers Party!

அந்த வரிசையில், 2022- ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை திருவெல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நேற்று (30/07/2022) மாலை 04.00 மணிக்கு நடைபெற்றது. இதில் அம்பேத்கர் சுடர் விருது கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதலமைச்சரும், மூத்த தலைவருமான சித்தராமையாவுக்கும், பெரியார் ஒளி விருது எழுத்தாளர் எஸ்.வி. ராஜதுரைவுக்கும், காமராசர் கதிர் விருது விஜிபி உலக தமிழர்கள் கட்சி தலைவர் வி.ஜி.சந்தோசம்வுக்கும், அயோத்திதாசர் ஆதவன் விருது முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி சி.செல்லப்பனுக்கும், காயிதே மில்லத் பிறை விருது எஸ்.டி.பி.ஐ.யின் தேசிய துணைத்தலைவர் தெகலான் பாகவிக்கும், செம்மொழி ஞாயிறு விருது, தொல்லியல் அறிஞர் கா.இராசனுக்கும், மார்க்ஸ் மாமணி எழுத்தாளர் இரா.ஜவகருக்கும் வழங்கப்பட்டது.

Awards ceremony on behalf of the Liberation Tigers Party!


விழாவில் பேசிய டெல்லி மாநில அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம், "நாட்டில் 90% மக்கள் அடிமையாகவே உள்ளார்கள். புதிய கல்வி கொள்கை என்பது மருத்துவம மற்றும் அனைத்து துறைகளிலும் தேக்கி வைத்துள்ளனர். மத்திய அரசே கல்வி விலையை அதிகரித்து உள்ளது. ஒரு குழந்தை படிப்புக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவாகின்றது. மத்திய அரசு அனைத்துத் துறைகளையும் தனியார்துறைக்கு எடுத்து செல்லும் நிலை உள்ளது. சாதி பிரச்சனை தான் வன்கொடுமைகளுக்கு காரணம் , மத்திய அரசு உண்மையை பேசுபவர்களை சிறையில் தள்ளி வருகின்றது" என தெரிவித்தார்.

Awards ceremony on behalf of the Liberation Tigers Party!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி பேசுகையில், "சித்தராமையாவும் , திருமாவளவனும் சமூக நீதியில் சமரசத்திற்கு இடம்
தராமல் இருப்பவர்கள். எங்களுக்கும் வி.சி.க.வுக்கும் பல்வேறு விஷயத்தில் எதிர் எதிர் கருத்து இருக்கும் அவையெல்லாம் மீறிய ஒரு உறவு இருக்கு என்றால் அது தான் சமூக நீதி. ராகுல்காந்தியுடன் நெருங்கிய பழக்கம் கொண்டவர் திருமா. தேசிய இயக்கத்துடன் திருமாவளவனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு" என தெரிவித்தார்.


கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா பேசுகையில், "ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் வேறு ஒரு சாதியை சேர்தவர்களுக்கு ஏன் இது வரை பொறுப்பு வழங்கவில்லை. இது அடிப்படை உரிமை அதற்காக தான் அம்பேத்கர் சொன்னார் சாதி உள்ளவரை இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 10% உயர் சாதி மக்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து உள்ள மத்திய அரசு இது நியாயமா?

Awards ceremony on behalf of the Liberation Tigers Party!

இதுக்காக கொண்டு வரும் சட்டங்களை ஒரே நாளில் ராஜ்யசபா, மக்களவையில் மத்திய அரசு நிறைவேற்றிவிட்டது. பா.ஜ.க. கட்சி இன்றும், நாளையும் மக்களைப் பாதுகாக்கும் கட்சி அல்ல. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சாத்தியம் இல்லை. அம்பேத்கர் பிறக்காவிடில் நமக்கு இத்தனை சட்டங்கள் நமக்கு கிடைத்து இருக்குமா? தமிழ்நாட்டை தந்தை பெரியார், காமராஜர் கட்டமைத்து உள்ளனர் .தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஆட்சி செய்கின்றார். அவருக்கு என்னுடைய வேண்டுகோள், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மாநில பட்ஜெட்டில் தனி நிதியை ஒதுக்குங்கள் என கேட்கின்றேன்.

Awards ceremony on behalf of the Liberation Tigers Party!


மத்திய அரசுக்கு சமூக நீதியில் அக்கறை இருந்தால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பட்ஜெட்டில் தனி நிதியை ஒதுக்குங்கள் என்று
கேட்கின்றேன். தமிழக வந்த பிரமர் மோடி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் வேலை வாய்ப்பு இன்மை பற்றி வாய் திறக்கவில்லை" எனத்
தெரிவித்தார்.

 

இறுதியாக பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., "கர்நாடக மாநில திராவிட இயக்க தலைவர் சித்தராமையா அவர்களே, ஏன் இவர் பிரதமராக வர கூடாது. காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தியைத் தேர்வு செய்யலாம். ஆனால் சித்தராமையா கொள்கையும், பேச்சையும் பார்க்கும் போது இவர் பிரதமராக வர வேண்டும் என்பதை நினைக்கின்றோம்.

Awards ceremony on behalf of the Liberation Tigers Party!

இதனை பத்திரிக்கையாளர்கள் தவறாக எடுத்து கொண்டு திரித்து எழுதக் கூடாது. ஒட்டு மொத்த தேசத்திற்கும் எதிரானவர்கள். பா.ஜ.க.அரசியலமைப்புச் சட்டத்தை தான் எதிர்க்கின்றனர். மூட நம்பிக்கை என்ற பெயரில் நடக்கும் கொடுமைகளைத் தடுப்பதற்காக கர்நாடக மாநில முதலமைச்சராக இருந்த போது சித்தராமையா சட்டம் கொண்டு வந்து இருக்கின்றார். ஆனால் அது தமிழகத்தில் தான் தான் முதலில் கொண்டு வந்து இருக்க வேண்டும். தேசிய அளவில் பா.ஜ.க.வை எதிர்க்கும் சக்தி காங்கிரஸுடன் இணைந்தால் மட்டும் தான் சாத்தியம்" எனத் தெரிவித்தார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.