Skip to main content

நீதிமன்ற வளாகத்திலேயே ரவுடி கொலை முயற்சி- மூவரை பிடித்து போலீசார் விசாரணை!

Published on 05/09/2022 | Edited on 05/09/2022

 

Attempted in the court premises - three arrested and investigated by the police!

 

சென்னை பிரபல ரவுடி மயிலை சிவா என்கிற சிவகுமார். சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த சிவா அசோக்நகரில் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் சேத்துப்பட்டு போலீசார் 2022 ஆண்டு கொலைமுயற்சி வழக்கில் மதுர பாலாவை என்பவரை கைது செய்தனர். மதுர பாலா புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட போது பாத்ரூமில் வழுக்கி விழாமல் வழக்கத்திற்கு மாறாக வாகனத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார். அதில் பாலாவிற்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பாலாவை அழைத்து சென்றனர். அப்பொழுது மூன்றுபேர் கொண்ட ரவுடி கும்பல் பாலாவை கொலை செய்ய திட்டமிட்டு கொலை முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் சம்பவ இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்ததால் உடனே அந்த ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.

 

இந்நிலையில் இன்று வேலூர் சிறையில் இருந்து ரவுடி பாலாவை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோது மீண்டும் ஒரு கும்பல் பாலாவை கொலை செய்ய முயன்றது. கோட்டூர்புரம் போலீசார் அக்கும்பலை வளைத்து பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

 

பிரபல ரவுடி சீடி மணியின் வலதும் இடதுமாக அரும்பாக்கம் ராதாகிருஷ்ணணன், மதுர பாலா இருவரும் இருந்தனர். தற்போது ராதாகிருஷ்ணன் மற்றும் பாலா இருவருமே வேலூர் சிறையில்உள்ளனர். எண்ணூர் தனசேகரன், டி.பி.சத்திரம் தட்சிணாமூர்த்தி, திருவெல்லிக்கேணி அபாஸ், சிவகுமார் ஆகியோர் தரப்பு தற்போது மதுர பாலாவிற்கு எதிரியாக இருக்கும் பட்சத்தில் இவர்களில் யாராவது ஒருவர்தான் இந்த கொலை முயற்சிக்கு காரணமாக இருக்கமுடியும் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்த கோணத்தில் போலீஸ் தரப்பு விசாரணையை தொடங்கி உள்ளார்களாம்.

 

அதேபோல் இந்த கொலை முயற்சி சம்பவத்தில் மதுர பாலா மீதும் சந்தேகமும் எழுந்துள்ளது. தன்னை முதலில் ஸ்டான்லி மருத்துவமனையில் கொலை செய்ய வந்த மூன்று பேரும் இவரே செட் செய்த கும்பல் என்று பேசப்படுகிறது. தன்னை யாராவது கொலை செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தாலும், ஸ்டான்லி மருத்துவமனையில் கன்விட் பாதுகாப்பு முறையாக கிடைக்க இப்படி செய்ததாகவும் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. அதேபோல தனக்கு பாதுகாப்பு வேண்டி இப்படி அவரே கொலை முயற்சி செய்ய ஆட்களை செட் செய்திருப்பாரா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறார்கள் போலீசார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார்.