Skip to main content

ஏடிஎம் மிஷினில் கொள்ளையிட முயற்சி... வடமாநில வாலிபர் கைது!

Published on 22/12/2021 | Edited on 22/12/2021

 

Attempt to rob ATM machine, youth arrested

 

விழுப்புரம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ளது முண்டியம்பாக்கம். இந்தப் பகுதியில் ஏடிஎம் மையம் ஒன்று செயல்பட்டுவருகிறது. நேற்று (21.12.2021) அதிகாலை அங்குள்ள ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. விக்கிரவாண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன், தலைமை காவலர் மகாராஜா உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவைச் சேர்ந்த 30 வயதே மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அந்த ஏடிஎம் மிஷினை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளதாகக் கூறி அவரை போலீசார் கையும் களவுமாகப் பிடித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், அவர் தெலுங்கு மொழி மட்டுமே பேசுவதால் தெலுங்கு பேசத் தெரிந்த ஒரு போலீசாரை வரவழைத்து அவர் மூலம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இந்த வாலிபரின் புகைப்படத்தை அவர் வசித்துவரும் ஆந்திர மாநிலம் தெலங்கானா காவல் நிலையத்திற்கு அனுப்பிவைத்தனர். இவர் மீது அங்கு ஏதேனும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா எனவும் விசாரணை செய்தனர். அதில் இவர், தெலங்கானா மாநிலம் கர்னூல் பகுதியில் உள்ள குண்டக்கல் கிராமத்தைச் சேர்ந்த காசிம் சண்டி என தெரியவந்தது. இவரை கைது செய்யும்போது அவர் கையில் ஒரு ஏடிஎம் கார்டு வைத்திருந்துள்ளார்.

 

இவர் ஏடிஎம் மெஷினில் பணம் எடுக்க வந்தவரா? அப்படி எடுக்க வந்தவர் என்றால் மிஷினை உடைக்க வேண்டிய அவசியம் என்ன? இப்படி பல்வேறு கோணத்தில் போலீசார் அவரிடம் விசாரணை செய்து அவர் மீது ஏடிஎம் மெஷினில் கொள்ளையடிக்க வந்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த இளைஞர் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் முண்டியம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.