Skip to main content

பட்டியலினப் பெண் மீது தாக்குதல்; மாஜி போலீஸ் அதிகாரி, பெண் இன்ஸ்பெக்டருக்கு சிறை

Published on 29/10/2022 | Edited on 29/10/2022

 

Attack on Scheduled Caste woman; Ex-police officer, woman inspector jailed

 

தூத்துக்குடி மாவட்டம் காசிலிங்க புரம் கிராமத்தைச் சேர்ந்த கணபதி பட்டியலினத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி பாப்பா. கணபதி ஏற்கனவே காலமாகிவிட்டார். பிழைப்பின் பொருட்டு கூலி வேலை பார்த்து வாழ்ந்து வந்த பாப்பாவின் மகள், கேரளாவின் மூணாறு பகுதியில் வசித்து வருகிறார்.

 

கடந்த 02.11.2007ல் பாப்பாவின் பக்கத்து வீட்டுப் பெண் லட்சுமி என்பவரின் வீட்டில் இரண்டரை பவுன் நகை காணாமல் போக, அவரது புகாரின் அடிப்படையில் அப்போதைய புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் விமல்காந்த், எஸ்.ஐ.காந்திமதி ஆகியோர் அன்றைய தினம் மதியம் ஒரு மணியளவில் காசிலிங்க புரம் சென்று, சந்தேகத்தின் பேரில் பாப்பாவின் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார்கள்.

 

nn

 

ஆத்திரத்தில் பாப்பாவின் வீட்டைச் சேதப்படுத்தியவர்கள், அங்கேயே பாப்பாவைத் தாக்கி காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். நகை பற்றிய விசாரணை என்ற பெயரால் பெண் என்று கூடப் பார்க்காமல் காவல் நிலையத்திலும் பாப்பாவை மூர்க்கமாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் பாப்பாவின் இரண்டு கைகளிலும், விரல்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு வலியால் துடித்திருக்கிறார். அவரது நிலை கண்டு அரண்டு போன போலீசார் இரவு 8 மணியளவில் திரண்டு வந்த ஊர்மக்களிடம் பாப்பாவை ஒப்படைத்திருக்கிறார்கள். பின்னர் ஊர்மக்கள் பாப்பாவை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். மருத்துவமனையில் 22 நாட்கள் சிகிச்சையில் இருந்திருக்கிறார் பாப்பா.

 

nn

 

பட்டியலினப் பெண் தாக்கப்பட்ட சம்பவம் என்பதால் அது குறித்து அப்போதைய கோவில்பட்டி கோட்டாட்சியரான சுடலைமணி விரிவாகவே விசாரித்திருக்கிறார். விசாரணையில் பாப்பாவை போலீசார் தாக்கியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்திருக்கிறார் கோட்டாட்சியர்.

 

இந்தச் சூழலில் பாதிக்கப்பட்ட பாப்பா, நெல்லை வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்குத் தொடர்ந்திருக்கிறார். அவரது மனு மீதான விசாரணை தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. இதற்கிடையே இன்ஸ்பெக்டர் விமல்காந்த் ஏ.டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று சென்னை காவல் தலைமையிடத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தொடர்ந்து சென்னையிலேயே வசித்து வருகிறார். அதே சமயம் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிய காந்திமதி பதவி உயர்வு பெற்று கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்க மங்கலம் காவல் நிலையத்தில் தற்போது இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இதனிடையே இந்த வழக்கு நெல்லையிலிருந்து தூத்துக்குடி மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

 

nn

 

வழக்கினை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், குற்றம் சாட்டப்பட்ட மாஜி ஏ.டி.எஸ்.பி. விமல்காந்த் மற்றும் இன்ஸ்பெக்டர் காந்திமதி ஆகியோருக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 26 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத் தொகையில் 50 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட பாப்பாவுக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.

 

இதுகுறித்து பாப்பாவின் வழக்கறிஞரான அதிசயகுமாரிடம் பேசியபோது, ''விசாரணை என்ற பெயரில் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். அன்றைய இரவு ஊர் முக்கியப் புள்ளிகள் இரண்டு பேரை வரவழைத்த போலீசார், அவர்களிடம் பாப்பாவை நல்ல முறையில் ஒப்படைத்ததாக எழுதியும் வாங்கியிருக்கிறார்கள். கோட்டாட்சியர் விசாரணையில் போலீசார் தாக்கியது உறுதி செய்யப்பட்டதால் அவரது அறிக்கையின்படி சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்போதே அரசு உத்தரவிட்டது. அதனை மறைத்துவிட்டுத் தொடர்ந்து பணியில் இருந்திருக்கிறார்கள். காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்ட நீதிமன்றம் வழங்கிய சிறப்பான முதல் தீர்ப்பு'' என்கிறார்.

 

திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது இந்த தீர்ப்பு.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.