Skip to main content

தேர்தல் தொடர்பான தகராறில் கூலிப்படையை ஏவி தாக்குதல்... முன்னாள் அரசு ஒப்பந்ததாரர் கைது!

Published on 21/07/2019 | Edited on 21/07/2019

சென்னை தியாகராய நகரில் உள்ள ஆந்திரா கிளப்பில் தேர்தல் தொடர்பான தகராறில் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட வரை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய சம்பவம் தொடர்பாக கூலிப்படை கைது செய்யப்பட்டுள்ளது.

Attack on election dispute ... Former government contractor arrested


சென்னை தி நகரில் உள்ளது ஆந்திரா கிளப். இங்கு சுப்பா ரெட்டி என்பவர் தலைவராக உள்ளார். அதேபோல் சக்கரவர்த்தி என்பவர் செயலாளராகவும் உள்ளார். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஆந்திரா கிளப்பிற்கு தேர்தல் நடத்தப்படும் இந்நிலையில் கடந்த பத்து வருடங்களாக அதற்கான தேர்தல் நடத்தப்படாமல் இருக்க நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Attack on election dispute ... Former government contractor arrested


இதற்கான பொதுக்குழுவில் தொழிலதிபர் ஸ்ரீதர்ரெட்டி என்பவர் வரவு செலவு கணக்குகள் தொடர்பாக கேள்வி எழுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குழம்பிப்போனர்கள் ஆந்திரா கிளப் நிர்வாகிகள். இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி ஆந்திரா கிளப்பில் இருந்து தனியாக நடந்து வந்த ஸ்ரீதர் ரெட்டியை மர்ம கும்பல் ஒன்று நோட்டமிட்டு கிரிக்கெட் பேட்டால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் இந்த காட்சிகள் பதிவாகி இருந்தது. கிரிக்கெட் மட்டையால் தாக்கிய நபர் அவரை தாக்கிய பின்பு  இரு சக்கர வாகனத்தில் காத்திருந்தவர் உடன் உடனடியாக அந்த இடத்தை விட்டு தப்பித்து சென்று விட்டார்.

 

Attack on election dispute ... Former government contractor arrested

 

Attack on election dispute ... Former government contractor arrested

இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை செய்த காவல்துறையினர் செய்யூரைச் சேர்ந்த ராஜேஷ், சுதாகர், கூலிப்படையை சேர்ந்த அருண்குமார், கோபி ஆகியோரை சுற்றி வளைத்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் பேரில் ஸ்ரீதர் ரெட்டியை கொலை செய்ய கூலிப்படையை ஏவிவவர் முன்னாள் அரசு ஒப்பந்ததாரராக இருந்த ஜனார்த்தன ரெட்டி என்பது தெரியவந்து அவரையும் கைது செய்தனர். அதேபோல் இந்த வழக்கில் கூலிப்படையை சேர்ந்த மேலும் மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

ரெய்டில் சிக்கிய பிக் பாஸ் டைட்டில் வின்னர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
big boss 17 title winner Munawar Faruqui arrested

சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த முனாவர் பரூக்கி, ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும் ராப் படகராகவும் பிரபலமானார். இவர் 2021 ஆம் ஆண்டில், ஒரு ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியின் போது இந்து கடவுள்களை பற்றி கருத்து தெரிவித்த நிலையில், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியததாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வலது சாரி அமைப்புகளின் அச்சுறுத்தல்களால் தான் நகைச்சுவை துறையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமலிருந்த முனாவர் பரூக்கி, 2022 ஆம் ஆண்டு ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து அதன் முதல் சீசனில் வெற்றி பெற்றார். மேலும் இந்தி பிக் பாஸ் சீசன் 17ல் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

big boss 17 title winner Munawar Faruqui arrested

இந்த நிலையில், ஹூக்காவில் புகையிலை தொடர்பான காவல்துறையினர் சோதனையில் முனாவர் பரூக்கி கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மும்பையில் உள்ள கோட்டை பகுதியில் ஹூக்கா பார்லரில் மூலிகை பொருள் என்ற பெயரில் ஹூக்காவில் புகையிலை பயன்படுத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பாருக்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இரவு 10.30 மணியளவில் தொடங்கிய அந்த சோதனை இன்று அதிகாலை 5 மணி வரை தொடர்ந்துள்ளது. 

இந்த சோதனையில் மொத்தம் ரூ. 4,400 ரொக்கம் மற்றும் ரூ.13,500 மதிப்புள்ள 9 ஹூக்கா பானைகள் பறிமுதல் செய்தனர். அந்த சோதனையின் போது 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பிக் பாஸ் 17 டைட்டில் வின்னர் முனாவர் பரூக்கியும் ஒருவர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முனாவர் பரூக்கியிடம், ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்ற வகையில், நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டு பின்பு காவல்துறையினர் விடுவித்தனர். இந்த சம்பவம் அங்கு சற்று பரப்பரப்பை ஏற்படுத்தியது.