Skip to main content

முதியவரை தாக்கிய கஞ்சா போதை இளைஞர்கள்! முதலமைச்சர் தொகுதியில் அட்டூழியம்!

Published on 28/07/2020 | Edited on 28/07/2020
pppp

 

 

புதுச்சேரியில் கடந்த ஓராண்டாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. இது தொடர்பான புகார்கள் எழும்போது மட்டும் போலீசார் சில இடங்களில் கஞ்சா விற்பனையை தடுத்து கஞ்சாவை கிலோ கணக்கில் பறிமுதல் செய்கின்றனர்.

 

கஞ்சா திருட்டுத்தனமாக திருவண்ணாமலையில் இருந்து ரயில் மூலம் வருவதாகவும், பேருந்து மூலம் வருவதாகவும் எழுந்த புகாரை தொடர்ந்து போலீசார் அனைத்து வழித்தடங்களிலும் கஞ்சா நடமாட்டத்தை தடுத்தனர். இருப்பினும் ஆந்திர எல்லையில் இருந்து பெரிய பொட்டலமாக வரும் கஞ்சா சிறு,சிறு பொட்டலங்களாக மாற்றப்பட்டு இளைஞர்கள், மாணவர்களை குறிவைத்து விற்கப்படுகின்றன.

 

புதுச்சேரியில் முதலமைச்சர் தொகுதியான நெல்லிதோப்பு பகுதியில் இந்த கஞ்சா விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகளை சட்டமன்றத்திலேயே சட்டமன்ற உறுப்பினர்கள் முன் வைத்தனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று இரவு நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட பெரியார் நகரில் இரண்டு சிறுவர்கள் கஞ்சா குடித்துவிட்டு பொதுமக்களை தாக்கி உள்ளனர். அந்த பகுதியை சேர்ந்த சுந்தரம் என்பவர் வீட்டில் வளர்த்து வரும் கோழியை அப்பகுதியில் உள்ள இரண்டு சிறுவர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனை அவர் கண்டுபிடித்து தட்டி கேட்டபோது, முதியவர் என்றும் பாராமல் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

 

காரணம் அவர்கள் கடும் கஞ்சா போதையில் இருந்ததால் செய்வது என்னவென்று தெரியாமல் தாக்குதல் நடத்தியதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கஞ்சா வாங்குவதற்காக சிறுவர்கள் வீடுகளில் புகுந்து பொருட்களை திருடுவதை வழக்கமாக கொண்டிருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாற்றுகின்றனர்.

 

நகரத்தின் மையப்பகுதியான நெல்லித்தோப்பில், அதுவும் முதலமைச்சர் தொகுதியிலேயே கஞ்சா நடமாட்டம் அதிகளவில் இருப்பதாகவும், இங்கிருந்து பலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாகவும், தட்டிக்கேட்கின்ற மக்கள் மிரட்டப்படுவும், தாக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் குற்றஞ்சாட்டுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.