Skip to main content

‘நீ உசிரோட இருந்தா எனக்கு சொத்து கிடைக்காது’ - தாயை கொல்ல முயன்ற மகன் கைது! 

Published on 16/08/2022 | Edited on 16/08/2022

 

Asset issue son who torture his mother

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், கிழக்கு காட்டுக்குட்டாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் மணி, சித்ரா தம்பதி. இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். இதில், மூத்த மகன் கோவிந்தன் மூன்று மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இளைய மகன் கோபி திருமணம் செய்து 5 வருடங்கள் ஆகின்றன. சித்ராவிற்கு சொந்தமாக மூன்று ஏக்கர் நிலம் உள்ளது.

 

இந்நிலையில், மூத்த மகன் இறப்பிற்கு பிறகு, அந்த நிலத்தில் தனது மகளுக்கு பங்கு உண்டு என்று தெரிவித்துள்ளார். இதற்கு அவரது இளைய மகன் கோபி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கோபிக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராற்றில் கோபியின் மனைவி சித்ராவின் சகோதரி வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். 

 

இதனால் கோபி, தனது தாய் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.  இந்நிலையில், நேற்று மதியம் கோபியின் தாய் சித்ரா வெளியே சென்றுவிட்டு தனது கிராமத்திற்கு வந்துகொண்டிருந்துள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற அவரது மகன் கோபி, தாயை வழிமறித்து தகராறு செய்துள்ளார். மேலும் அவர், தாய் சித்ராவை எட்டி உதைத்து அவரது கழுத்தில் கத்தியை வைத்து, ‘நீ செத்தால் தான் சொத்தில் யாருக்கும் பங்கு கிடைக்காது. நீ உயிரோடு இருந்தால் சொத்தை மகளுக்கு பங்கு பிரித்து கொடுத்து விடுவாய்’ என்று ஆத்திரத்துடன் கத்தியபடி அவர் வைத்திருந்த கத்தியால் தாயின் கழுத்தை அறுத்துள்ளார். 

 

இதில் சித்ராவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த வழியாக வந்தவர்கள், உடனடியாக சித்ராவை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சித்ராவின் மகன் கோபியை கைது செய்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ஏமாற்றிய வடமாநில இளைஞர்; தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Two people were arrested for deceiving people by claiming were applying jewelry polish

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பழைய வெள்ளி, தங்கம், கண்ணாடி பொருட்கள், ஆகியவற்றிற்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி கிராம மக்களை நம்ப வைத்துள்ளனர். அப்போது ஒரிஜினல் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடம் வாங்கிய அந்த பீகார் இளைஞர்கள் பாலிஷ் போட்டு கொடுத்துள்ளனர்.

இதை பயன்படுத்திக் கொண்டு அந்த பீகார் இளைஞர்கள் ஒரிஜினல் நகைகளை பாலிஷ் போடுவதாக வாங்கிக் மறைத்து வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக போலியான நகை மற்றும் பொருட்களை திருப்பிக் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் ஊர்மக்களுக்கு தெரியவர இருவரையும் பிடித்து தர்ம அடிகொடுத்து நயினார்பாளையம் வி.ஏ.ஓவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வி.ஏ.ஓ ரஞ்சித் குமார் பீகார் இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். 

விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்புகுமார்(31), அமர குமார் யாதவ்(34) இருவரும் தான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாலிஷ் போட வைத்திருந்த உபகரண பொருட்களுடன் இருவரையும் கீழ்குப்பம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.