சிதம்பரத்தில் இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சிதம்பரம் அருகே உள்ள மேல்புவனகிரியைச் சேர்ந்த செல்வம் மகன் சூரியமூர்த்தி (25). முடிதிருத்துநர் வேலை செய்யும் இவர் சிதம்பரத்தைச் சேர்ந்த அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பயிலும் 17 வயது மாணவியை காதலிப்பதாக பழகியுள்ளார். பின்னர் கடந்த 23-ம் தேதி அப்பெண்ணை அழைத்துச் சென்று ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பெண்ணின் தாயார் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் நகர போலீஸார் இருவரையும் மீட்டு, இளம்பெண்ணை பரிசோதனைக்கு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து வாலிபர் சூரியமூர்த்தி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையிலடைத்துள்ளனர்.