Skip to main content

ஆண் சடலத்திற்கு கஞ்சா வியாபாரிகள் காரணமா? - தீவிர விசாரணையில் காவல்துறையினர்!

Published on 26/08/2021 | Edited on 26/08/2021

 

Are cannabis dealers responsible for male corpses? - Police in serious investigation

 

திருச்சி ரஞ்சிதபுரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாக்கடையில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் கே.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் செல்வகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியைச் சேர்ந்த சிலரது உதவியுடன் சாக்கடையிலிருந்து அரை நிர்வாணத்துடன் கிடந்த உடலை மீட்டனர்.

 

பின் ரஞ்சிதபுரம் பகுதியில் உள்ள மக்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இறந்த உடல் அருகே பாதி நிலையில் கட்டி முடிக்கப்பட்ட பழைய கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடத்தின் உள்ளே மது பாட்டில்கள், ஆணுறைகள் காணப்பட்டதால், இங்கு பல சமூக விரோத செயல்கள் நடைபெறுவது தெரியவந்தது. இறந்த நபருக்கு 50 முதல் 60 வயது இருக்கலாம் எனவும், இவர் ரஞ்சிதபுரம் பகுதியில் சிறிது நாட்களாக சுற்றிவந்ததாகவும் தெரிகிறது. மேலும், பாழடைந்த இந்தக் கட்டடத்தில்தான் இவரது உடைமைகள், செருப்புகள் போன்றவை இருந்துள்ளன.

 

Are cannabis dealers responsible for male corpses? - Police in serious investigation

 

சில மாதங்களாக ரஞ்சிதபுரம் பகுதியில் சில இளைஞர்கள் கஞ்சா போதையில் பொதுமக்களை வம்புக்கு இழுத்ததாக கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கஞ்சா வியாபாரிகள் ஜிகார்னர் மைதானத்திலும், இந்த பாழடைந்த மண்டபத்திலும் வைத்துதான் கஞ்சா விற்றதாக இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இந்நிலையில், இந்த முதியவர் இந்தப் பாழடைந்த மண்டபத்தில் தங்கியது கஞ்சா வியாபாரிகளுக்கு இடையூறாக இருந்திருக்கலாம் எனவும், இதனால் முதியவரை அந்த கஞ்சா வியாபாரிகள் சாக்கடையில் தள்ளி கொலை செய்திருக்கலாம் எனவும் இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

 

முதற்கட்ட விசாரணையில் முதியவர் மழை பெய்த அன்று சாக்கடையில் தவறி விழுந்திருக்கலாம் என போலீசாருக்குத் தெரியவந்துள்ளது. ஆனால் அப்பகுதி பொதுமக்கள் கஞ்சா விற்கும் வியாபாரிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணத்தினால் இறந்தாரா என கே.கே. நகர் போலீசார் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கூறுகின்றனர். இறந்தவரின் உடலைக் கைப்பற்றிய கே.கே. நகர் போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“தமிழக போலீசார் சரியாகச் செயல்படவில்லை” - சசிகலா பேச்சு!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Tamil police are not working properly" - Sasikala speech

தமிழக போலீசார் சரியாகச் செயல்படவில்லை எனச் சசிகலா பேட்டியளித்துள்ளார்.

சென்னையில் சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணி 90 சதவிதம் நிறைவு பெற்றுள்ளது. இன்னும் 10 நாட்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். தற்போது அதிமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் உள்ளனர். தமிழக போலீசார் சரியாக செயல்படவில்லை.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி நடத்திய போது அவர் ஒரு பெண் முதல்வர் என்பதால் அரசியல் கட்சியினர் பலரும் அவரை விமர்சனம் செய்தனர். தற்போது ஜெயலலிதா புகைப்படம் பலருக்கும் தேவைப்படுகிறது. அதற்கு அவர் ஆற்றிய பணிகளே காரணம்” எனத் தெரிவித்தார். 

Next Story

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு; பாதுகாப்பு கேட்டு புதுமண தம்பதிகள் தஞ்சம் 

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
newly married couple took shelter in Police  seeking protection

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே மசிகம் கிராமத்தில் வசிப்பவர் கோவிந்தசாமி. இவரது மகன் சரண். கோவிந்தசாமி தேங்காய் உரிக்கும் கூலி தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பெண்னை சரண் காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். 

இதன் பிறகு ஊருக்கு வந்த இருவரையும் பெண் வீட்டார் கடுமையாக அடித்து துன்புறுத்தி ஊருக்குள் வரக்கூடாது எனத் துரத்தி அடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த ஜோடி, திருமண கோலத்துடன் வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்துள்ளது. இது குறித்து தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.