Skip to main content

களத்தில் ஆட்டம் காட்டிய அனுராதா எஸ்.ஐயின் சின்ன ராவணன்

Published on 19/01/2023 | Edited on 19/01/2023

 

 Anuradha si bull won first prize best bull jallikattu competition held Pudukottai.

 

2020 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அத்தனை பேர் கவனத்தையும் ஈர்த்து ஒட்டுமொத்த மீடியாக்களின் பார்வையையும் திரும்பிப் பார்க்க வைத்த காளை ராவணன். புதுக்கோட்டை நெம்மேலிப்பட்டி பளு தூக்கும் வீராங்கனை அனுராதா எஸ்.ஐக்கு பரிசாக கிடைத்த ராவணன் தான் அந்தக் காளை. முதல் பரிசு ராவணனுக்கு கிடைக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாம் பரிசு கிடைத்தது.

 

அதன் பிறகு பல வாடிவாசல்களில் நின்று விளையாடிய ராவணன் கடந்த 2021ம் ஆண்டு ஒரு ஜல்லிக்கட்டில் நின்று விளையாடியதோடு வெளியேறிய ராவணனை உரிமையாளரும் பிடிக்க முடியாமல் தேடியபோது சில நாட்களுக்குப் பிறகு ஒரு இடத்தில் கரையான் புற்றை உடைத்த நிலையில் பாம்பு கடித்து இறந்து கிடந்தது. இந்த தகவல் ஒலிம்பிக் போட்டிக்கான பளு தூக்கும் பயிற்சியில் இருந்த அனுராதாவிற்கு சொன்னபோது கதறி அழுததோடு உடனே ராவணனை காண ஊருக்கு கிளம்பி வந்து ராவணன் புதைக்கப்பட்ட இடத்தில் விழுந்து கதறி அழுத பிறகே வீட்டிற்குச் சென்றார்.

 

ராவணன் இழப்பு எங்களுக்கு பேரிழப்பு அந்த இடத்தை யாராலும் ஈடு செய்ய முடியாது. ஆனால் இனிமேல் அத்தனை காளைகளையும் ராவணன் பெயரிலேயே வாடியில் விடுவோம். வெற்றி வாகை சூடி வரும். அதற்காக அண்ணன் மாரிமுத்துவும் அம்மாவும் காளைகளுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார்கள் என்றார்.

 

 Anuradha si bull won first prize best bull jallikattu competition held Pudukottai.

 

இந்த நிலையில்தான் இன்று வியாழக்கிழமை புதுக்கோட்டை மாவட்டம் முக்காணிப்பட்டியில் தேவாலய பொங்கல் விழா ஜல்லிக்கட்டை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இந்த வாடியில் ராவணன் தம்பியாக களமிறங்கிய  'ராவணன் 2' சீறிப்பாய்ந்து வந்ததும் அத்தனை வீரர்களும் பேரிக்காட்களில் ஏறிக் கொண்டனர். வீரர்களால் கிட்டே நெருங்க முடியவில்லை. வீரர்கள் மீதான கோபத்தால் வரவேற்பிற்காக கட்டியிருந்த வாழை மரங்களை கிழித்து ஆட்டம் காட்டியது. சுமார் 10 நிமிடங்களுக்கு மேலாக நின்று விளையாடிய சின்ன ராவணனுக்கு பரிசுகள் குவிந்தது. கடைசி வரை பிடிக்க முடியவில்லை. காளை வெற்றி பெற்றதாக அறிவித்து வெளியேற்றப்பட்டது. அப்போதே 'சிறந்த காளை என எழுதுங்கப்பா' என்று மைக்கில் விளம்பரம் செய்தனர். அனைத்து காளைகளும் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில் இறுதியாக எஸ்.ஐ அனுராதாவின் 'ராவணன் 2' சிறந்த காளையாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு முதல் பரிசு வழங்கப்பட்டது. அனுராதா எஸ்.ஐயின் பெயரில் காளைகள் களமிறங்கினாலும் அவரது அண்ணன் மாரிமுத்துவே அத்தனை பயிற்சிகளும் கொடுத்து வளர்த்து வருகிறார்.

 

அதே போல 20 காளைகளை கட்டித் தழுவிய வடவாளம் கலியுக மெய்யர் குழுவைச் சேர்ந்த மாத்தூர் கவாஸ் சிறந்த மாடுபிடி வீரராகத் தேர்வு செய்யப்பட்டு மோட்டார் சைக்கிள் பரிசு வழங்கப்பட்டது. கயிறுகளுடன் அவிழ்க்கப்பட்ட காளைகளுக்கு பரிசுகள் தவிர்க்கப்பட்டது. புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி ஜல்லிக்கட்டை நடத்தி முடித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Next Story

பரிதாபமாக உயிரிழந்த பெண் ஆய்வாளர்; உடலைச் சுமந்து சென்ற எஸ்.பி!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

புதுக்கோட்டை நகரில் பழைய மருத்துவமனைக்கு அருகே பல வருடங்களாக செயல்படாத சிக்னல் அருகே நகராட்சி சார்பில் ஞாயிற்றுக் கிழமை மதியம் திடீரென பெரிய திண்ணை போல வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில், எந்தவிதமான எச்சரிக்கை அடையாளமும் வைக்கவில்லை, வெள்ளைக் கோடுகள் போடவில்லை. சில மணி நேரங்களுக்குள் திடீர் வேகத்தடையில் பலர் கீழே சாய்ந்தனர்.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

அதே போல திருச்சி திருவரம்பூர் 2 காவல் நிலைய ஆய்வாளர் பிரியா தன் குழந்தைகளைப் பார்க்க இரவு பேருந்தில் வந்து இறங்கியுள்ளார். அவரது கணவர் புல்லட்டில் வந்து வீட்டிற்கு அழைத்துச் சென்ற போது பிரதான சாலையில் அடையாளமில்லாமல் அமைக்கப்பட்டுள்ள திடீர் வேகத்தடையில் ஏறி இறங்கும் போது பினனால் இருந்த ஆய்வாளர் பிரியா கீழே சாய பின்பக்கம் தலையில் அடிபட்டு படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்த ஆய்வாளரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் செவ்வாய் கிழமை (09.04.2024) காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பெண் காவல் ஆய்வாளர் படுகாயமடைந்த பிறகு யாரோ கோலமாவு வாங்கி அடையாளமிட்டனர். அதன் பிறகு இரவில் நகராட்சி நிர்வாகம் அடையாள வெள்ளைக் கோடுகள் போட்டுள்ளனர்.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

இந்த நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த ஆய்வாளர் பிரியா உடல் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு மாலையில் அவரது சொந்த ஊரான நெடுவாசல் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே, டிஎஸ்பிக்கள் ஆலங்குடி பவுல்ராஜ், புதுக்கோட்டை ராகவி, கோட்டைப்பட்டினம் கெளதம் மற்றும் போலீசார் சல்யூட் அடித்து அஞ்சலி செலுத்தினர்.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

அனைவரும் அஞ்சலி செலுத்திய பிறகு நடந்த இறுதி ஊர்வலத்தில் எஸ்.பி வந்திதா பாண்டே, உறவினர்களுடன் சேர்ந்து ஆய்வாளர் பிரியாவின் உடலை மயானத்திற்கு தூக்கிச் சென்றது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து ஆய்வாளர் பிரியாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

புதுக்கோட்டை நகராட்சியில் தீடீரென அமைக்கப்பட்ட வேகத்தடையில் எச்சரிக்கை அடையாளப் பதாகை, வெள்ளைக் கோடு போடாமல் அலட்சியமாக இருந்ததால், ஆய்வாளர் உயிர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.