Skip to main content

ஆந்த்ராக்ஸ் நோயால் மான் உயிரிழப்பு... சென்னை ஐஐடியில் பரபரப்பு

Published on 18/03/2022 | Edited on 18/03/2022

 

deer

 

சென்னை ஐஐடியில் 4 மான்கள் உயிரிழந்த நிலையில், ஒரு மான் ஆந்த்ராக்ஸ் நோயால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மேலும் இரண்டு மான்களுக்கு ஆந்த்ராக்ஸ் நோய் பாதிப்புக்கான அறிகுறிகள் இருப்பதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

 

உயிரிழந்த மானின் மாதிரிகள் பரிசோதனைக்காகக் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வளாகத்தில் உள்ள மாற்ற மான்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், முடிவுக்காக காத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஐடி வளாகத்தில் உள்ள நாய்கள் மூலம் ஆந்த்ராக்ஸ் நோய் மான்களுக்கு பரவியிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்த்ராக்ஸ் நோயால் மான் இறந்துள்ள நிலையில் கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் மற்றும் ஐஐடி வளாகத்தில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் கிண்டி பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் உணவுப்பொருட்களை விலங்குகளுக்குத் தரக்கூடாது, விலங்குகளைத் தொடக்கூடாது என ஐஐடி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

Chennai IIT student incident information published in the investigation

 

மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சச்சின் குமார் ஜெயின் (வயது 31). இவர் சென்னையில் உள்ள ஐ.ஐ.டி.யில் பி.எச்.டி படித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் வேளச்சேரியில் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்துள்ளார். இந்த சூழலில் சச்சின் குமார் ஜெயின், கடந்த மார்ச் 31 ஆம் தேதி காலை வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்றுள்ளார். ஆனால், கல்லூரியில் காலை வகுப்பு முடிந்ததும் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

 

இதனையடுத்து, சச்சின் குமார் ஜெயினுடன் தங்கியிருந்த மாணவர்கள் கல்லூரி முடித்து வீடு திரும்பினர். அப்போது சச்சின் குமார் ஜெயின் வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு மரணித்த நிலையில் இருந்துள்ளார். இதனைக் கண்டு பதறிய அவரது நண்பர்கள், உடனடியாக வேளச்சேரி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த வேளச்சேரி போலீஸார், சச்சின் குமார் ஜெயினின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை ஐஐடியின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவு பேராசிரியர் ஆசிஷ்குமார் சென்னின் துன்புறுத்தல் காரணமாக சச்சின் குமார் ஜெயின்  தற்கொலை செய்து கொண்டதாக அவரது சகோதரர் புகார் அளித்திருந்தார். புகாருக்கு உள்ளான பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஐஐடி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் போராட்டத்தையடுத்து மாணவர் சச்சின் குமார் ஜெயின் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த தமிழக முன்னாள் போலீஸ் டிஜிபி திலகவதி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை சென்னை ஐஐடி அமைத்திருந்தது.

 

Chennai IIT student incident information published in the investigation
பேராசிரியர் ஆசிஷ்குமார் சென்

 

இந்த குழுவின் விசாரணையின் முடிவில் மாணவர் சச்சின் குமார் ஜெயின் தற்கொலைக்கு பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் துன்புறுத்தலே காரணம் என ஐவர் குழு அறிக்கை அளித்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் இந்த குழு பரிந்துரை செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

 

ஐவர் குழு மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்துகொண்ட மாணவர் சச்சின் குமார் ஜெயின் மட்டுமின்றி மேலும் பல மாணவர்கள் துன்புறுத்தப்பட்டனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ஐஐடியில் கடந்த பிப்ரவரி கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் மட்டும் 4 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

மான் வேட்டையில் ஈடுபட்ட இளைஞரை மடக்கிய வனத்துறை; இருவர் தலைமறைவு

Published on 23/05/2023 | Edited on 23/05/2023

 

virudhachalam reserve forest deer incident forest ranger enquiry

 

சேலம், பெரம்பலூர், கடலூர், திருச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை ஒட்டி நீண்டு கிடக்கிறது வனத்துறைக்குச் சொந்தமான காப்புக்காடுகள். இந்த காட்டில் மான்கள், மயில்கள், முயல்கள் காட்டுப் பன்றிகள், எறும்பு திண்ணிகள், உடும்புகள் என ஏராளமான வன விலங்குகள் வாழ்கின்றன. இந்த நிலையில் விருத்தாசலம் வனச்சரக அலுவலர் ரகுவரன் தலைமையில் வனவர்கள் பன்னீர்செல்வம், சிவக்குமார், வனக்காப்பாள்கள் ஆறுமுகம், நவநீதகிருஷ்ணன், ஜெயவர்தன் ஆகியோர் வேப்பூர் பகுதியில் உள்ள கிருஷ்ணாபுரம் வனக்காட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

அப்பொழுது காட்டுக்குள் ஒரு இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்தனர். சந்தேகத்திற்கிடமான முறையில் காட்டுக்குள் திரிந்த அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்ய வனத்துறையினர் முயன்றனர். அதற்குள் இருசக்கர வாகனத்தில் வந்த மூவரில் இருவர் இருசக்கர வாகனத்தில் இருந்து குதித்து மான் ஒன்றை கீழே போட்டுவிட்டு தப்பி ஓட்டம் பிடித்தனர். அவர்களை துரத்திச் சென்றதில் ஒருவர் மட்டும் வனத்துறையினர் கையில் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் இறையூர் கிராமத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் மகன் யாக்கோப் (வயது 29) என்பது தெரியவந்தது. தப்பிச் சென்ற இருவரும் அதே இறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஜோசப் ராஜ், மொட்டையன் என்பது தெரிய வந்தது.

 

யாக்கோபிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மான் நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த நிலையில் இருந்தது. அவர் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியில் மேலும் இரண்டு குண்டுகள் இருந்தன. இதையடுத்து வேட்டைக்காக அவர்கள் பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், வனத்துறையினர் பிடிபட்ட யாக்கோப்பிடம் விசாரணை மேற்கொண்டு வருவதோடு தப்பிச் சென்ற இருவரையும் தேடி வருகின்றனர்.