Skip to main content

'அண்ணாத்த' செல்ஃபி பூத் – பிரச்சார பயணம் தொடங்கிய வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தினர்!

Published on 21/10/2021 | Edited on 21/10/2021

 

'Annatha' Selfie Booth - Vellore District Rajini Fan Club Launches Campaign Tour!

 

வரும் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி. இந்த நாளில் நடிகர் ரஜினியின் 'அண்ணாத்த' திரைப்படம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுமைக்கும் வெளியாகிறது. இந்த திரைப்படத்துக்கான கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள் இப்போதே இறங்கியது ஆச்சரியப்பட வைக்கிறது.

 

இந்திய சினிமாவில் ரஜினி காலத்திய (1970) நாயக நடிகர்கள் எல்லாம் நாயகன் என்கிற இடத்திலிருந்து அப்பா, அண்ணன், தாத்தா என குணச்சித்திர வேடங்களுக்கு மாறிப்போய்விட்டார்கள். ஆனால் ரஜினி இன்னமும் மாஸ் ஹீரோவாக திரைத்துறையில் கோலோச்சுகிறார். அவரின் சம்பளம் மட்டுமே 100 கோடி சொச்சம் எனச்சொல்லப்படுகிறது. ரஜினியின் திரைப்படங்கள் எல்லாம் 500 கோடிக்கு மேலான வியாபார பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி ரஜினியின் 168வது படமான அண்ணாத்த படமும் 500 கோடி வியாபார படம் எனச்சொல்லப்படுகிறது. ரஜினியின் இந்த உயர்வுகளுக்குப் பின்னால் ரசிகர்களுக்கு மிகமிக முக்கிய இடமுண்டு.  

 

'Annatha' Selfie Booth - Vellore District Rajini Fan Club Launches Campaign Tour!

 

இந்தாண்டு தொடக்கம்வரை தமிழ்நாட்டில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் பெரிய கொண்டாட்ட மனநிலையிலிருந்தனர். அதற்குக் காரணம், கடந்த 25 ஆண்டுகாலமாக ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலின்போதும் ரஜினி அரசியலுக்கு வருகிறார் எனச்சொல்லப்பட்டு, பேசப்பட்டுப் பரபரப்பு கூட்டப்பட்டே வந்தது. 2018ல் போர் (தேர்தல்) வரும்போது களத்துக்கு வருகிறேன் என அறிவித்தார் ரஜினி. 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது சட்டமன்றமே இலக்கு என்றார். 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்குச் சிலமாதங்களுக்கு முன்பு, கட்சி தொடங்கப்படும், கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் என அறிவித்தார். அண்ணாத்த படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்துகொண்டிருந்தது. படப்பிடிப்பு தளத்திலிருந்த சில பணியாளர்களுக்கு கரோனா வந்தது. ரஜினியும் திடீரென உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றார்.

 

சென்னை திரும்பியதும் கரோனா, தனது உடல்நிலை குறித்து நீண்ட விளக்கம் தந்து அரசியல்கட்சி இப்போது மட்டுமல்ல எப்போதும்மில்லை என அறிவித்தார். அறிவித்ததோடு நிற்காமல் தனது ரஜினி மக்கள் மன்றத்தைக் கலைத்துவிட்டு அது இனி ரசிகர் மன்றமாக மட்டுமே செயல்படும் என அறிக்கை வெளியிட்டார். அப்படி அவர் அறிவித்தபோது, ரஜினியின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது, ரசிகர்கள் போராட்டம் நடத்தினார்கள், உண்ணாவிரதம் இருந்தார்கள், சில மாவட்ட நிர்வாகிகள் வேறுகட்சிகளுக்குச்சென்று தங்களை இணைத்துக்கொண்டார்கள். என் ரசிகர்கள் எந்தக்கட்சிக்குப் போனாலும் அவர்கள் என் ரசிகர்களே என அறிவித்தார். இனி ரஜினி அவ்வளவுதான், அவரின் படங்கள் ஓடாது, ரசிகர்கள் யாரும் அவரது படங்களைக் கொண்டாடமாட்டார்கள் என்ற விமர்சனம் எழுந்தது. அந்த விமர்சனங்கள், கருத்துக்களையெல்லாம் பொய்யாக்கும் விதமாக ரசிகர்கள் என்றும் ரஜினி பக்கம் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்கள் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தினர்.

 

'Annatha' Selfie Booth - Vellore District Rajini Fan Club Launches Campaign Tour!

 

சோளிங்கர் நகரில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தின் மாவட்டச் செயலாளர் சோளிங்கர் ரவி தலைமையில் அண்ணாத்த படம் வெளியீட்டு விழா பிரச்சார கொண்டாட்டத்தைத் துவங்கியுள்ளனர். தனியார் மண்டபத்தில் நடந்த இந்தநிகழ்வில் சுமார் நூற்றுக்கும் அதிகமான ரசிகர்கள் கலந்துகொண்டு அண்ணாத்த பட ஸ்டில் தாங்கிய அண்ணாத்த செல்ஃபி பூத் என ஒன்றை உருவாக்கி வைத்துள்ளனர். அதன் முன் நின்று ரசிகர் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் போட்டோ எடுத்துக்கொண்டனர்.

 

'Annatha' Selfie Booth - Vellore District Rajini Fan Club Launches Campaign Tour!

 

இதுகுறித்து மாவட்டச் செயலாளர் சோளிங்கர் ரவி நம்மிடம், ''வேலூர் மாவட்டத்தில் ரயில் நிலையம், பேருந்து நிலையம் எனப் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சம்மந்தப்பட்ட துறையில் முறையாக அனுமதி வாங்கி அண்ணாத்த செல்ஃபி பூத் வைக்கவுள்ளோம். ரசிகர்கள், பொதுமக்கள் அண்ணாத்த படம் குறித்த தகவல்களை அங்கு தெரிந்துகொள்வதோடு, அண்ணாத்த படத்தின் ஸ்டில்ஸ்களோடு யார் வேண்டுமானாலும் செல்ஃபி எடுத்துக்கொள்ளலாம் என வைக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இன்னும் வேறு சில திட்டங்களும் உள்ளன. வெளியீட்டு நாள் நெருங்க நெருங்க மக்களிடம் தலைவரின் படத்தை கொண்டுச்சென்று சேர்க்க ரசிகர்களான நாங்கள் முடிவு செய்துள்ளோம், இந்தப்படம் பெரிய வெற்றிபெறும்'' என்றார்.

 

ரஜினி படங்களில் இடம்பெறும் ரஜினியின் மேனாரிஸங்களைப்போலவே அவரின் ரசிகர்களும் வித்தியாசமானவர்களாகவே உள்ளார்கள்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Next Story

'காமராஜருக்கு நடந்த நிகழ்வு எனக்கும் நடந்தது'- பரப்புரையில் முதல்வர் சொன்ன சுவாரஸ்யம்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
'What happened to Kamaraj also happened to me' - the chief minister said interestingly in the lobby


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் திமுக சார்பில் வேலூரில் போட்டியிடும் கதிர் ஆனந்த், அரக்கோணம் தொகுதி வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோரை ஆதரித்து கோட்டை மைதானம் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்.

பரப்புரை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும் தமிழ்நாட்டை மேலும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும். தேர்தல் சீசனுக்கு மட்டுமே பிரதமர் தமிழகத்திற்கு வருகிறார். வெள்ள நிவாரணம் கேட்டால் தரமாட்டார். தமிழ்நாட்டை வெறுக்கின்ற பிரதமர் மோடிக்கு பதிலாக இந்தியா கூட்டணியின் சார்பில் பிரதமராக போகிறவர் நிச்சயமாக இந்திய ஜனநாயகத்தின் மேல் உண்மையான மதிப்பும், இந்திய மக்கள் மீது உண்மையான பாசமும், அரசியல் சட்டத்தை மதிக்கின்ற பண்பும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெருந்துணையாக நிற்பவருமாக இருப்பார்.

இன்று காலையில் நான் பெருமை கொள்ளக்கூடிய ஒரு செய்தியை சமூக வலைத்தளத்தில் பார்த்தேன். நம்முடைய திட்டங்கள் இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகத்திற்கே முன்னோடியாக இருக்கிறது. இன்று கனடா நாட்டில் காலை உணவு திட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த திட்டம் எப்படி உருப்பெற்றது. பெருந்தலைவர் காமராஜர் மத்திய உணவு திட்டம் கொண்டு வந்ததற்கு காரணமாக ஒரு சம்பவத்தை சொல்லுவார்கள். பெருந்தலைவர் காரில் போய்க் கொண்டிருந்தபோது விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சிலரை சந்தித்தாராம். அங்கு காரை நிறுத்தி அவர்களை பக்கத்தில் வரச் சொல்லி 'இன்று பள்ளிக்கு போகவில்லையா?' என்று கேட்டார். அந்த பிள்ளைகள் 'எங்கள் குடும்பத்தில் உணவுக்கே வழி இல்லாததால் எங்க அப்பா அம்மா பள்ளிக்கு அனுப்பவில்லை' என்று சொல்லவும் பள்ளியில் மதிய உணவு போட்டால் அதற்காகவாவது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவார்கள் என சிந்தித்து யோசித்து காமராஜர் மதிய உணவு திட்டத்தை தொடங்கினார்.

எனக்கும் அதே மாதிரி ஒரு நிகழ்வு நடந்தது. நான் முதலமைச்சரானவுடன் சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு போயிருந்தேன். ஒரு குழந்தையை பார்த்து 'என்னம்மா சாப்பிட்டீங்களா' என்று எதார்த்தமா கேட்டேன். அந்த குழந்தை 'வீட்டில் அப்பா அம்மா வேலைக்கு போறாங்க, காலையில உணவு செய்ய மாட்டாங்க அதனால் சாப்பிடவில்லை' என்று சொன்னதும் எனக்கு மனசே சரியில்லை.

கோட்டைக்கு போனவுடனே அதிகாரிகளை அழைத்தேன். பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் கொண்டு வரணும் திட்டத்தை தயார் பண்ணுங்கள் என்று சொன்னேன். அதிகாரிகள் என்னிடம் ரொம்ப பணிவாக சார்  நம்ம நிதிநிலை ரொம்ப மோசமா இருக்கு. அதோடு இல்லாமல் தேர்தல் அறிக்கையில் கூட நாம் இதை சொல்லவில்லை என்று சொன்னார்கள். உடனே நான் சொன்னேன், 'வாக்குறுதி கொடுக்கவில்லை என்றால் என்ன நம் எதிர்கால தலைமுறை குழந்தைகள் தான். அவர்கள் காலையில் நன்றாக சாப்பிட வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் படிப்பது மனதில் மனதில் பதியும். இதை நாம் கண்டிப்பாக செய்ய வேண்டும். நிதி நிலையை சரி செய்யவும் திட்டம் போடுவோம். நீங்க ஃபைலை தயார் பண்ணுங்கள்' என்று சொன்னேன். அந்த ஃபைலில் கையெழுத்து போட்ட கை தான் இந்த ஸ்டாலின் கை''என்றார்.