Skip to main content

சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கக் கோரி அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்! 

Published on 03/12/2021 | Edited on 03/12/2021

 

Annamalai University students struggle to call for certificate verification!

 

தமிழக தேர்வாணையம் கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி உதவி தோட்டக்கலை அலுவலர் பணிக்கு 307 பேருக்கும், உதவி வேளாண் அலுவலர் பணிக்கு 122 பேருக்கும் காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. அரசு அங்கிகாரம்பெற்ற விவசாய கல்லூரியில் பட்டய படிப்பு படித்திருக்க வேண்டும். கோவை வேளாண் கல்லூரி, திண்டுக்கல் காந்தி கிராம் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அதற்கான கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனால், அந்தப் பணிக்கு அண்ணாமலை பல்கலைக்கழக விவசாய துறையில் கல்வி பயின்ற மாணவர்களால் விண்ணப்பிக்க முடியாமல் இருந்தது.

 

அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம், இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கண்ணன், மாவட்டச் செயலாளர் குமரவேல் உள்ளிட்டவர்கள் அப்போதைய துணைவேந்தர் முருகேசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களை தேர்வுக்கு அனுமதிக்க தமிழக தேர்வாணையத்திற்கு பரிந்துரைத்தனர். அதன்பேரில் அண்ணாமலைப் பல்கலைக்கழக விவசாய துறையில் பட்டயப் படிப்பு பயின்ற மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் தேர்வில் கலந்துகொண்டனர்.

 

இந்தத் தேர்வு முடிவுகள் கடந்த செப் 23-ஆம் தேதி வெளியானது. இதில் பல்கலைக் கழகத்திலிருந்து தேர்வு எழுதிய 180-க்கும் மேற்பட்டவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.  இந்நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பதற்காக வரும் 8 மற்றும் 9ஆம் தேதிக்கு கோவை வேளாண் மற்றும் காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்று அரசு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு விடுக்கவில்லை. 

 

அதனால், வெள்ளிக்கிழமை  (3ஆம் தேதி) அன்று தமிழக தேர்வாணய தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழக வளாகத்தில் அமர்ந்து தமிழக தேர்வாணையத்தில் வேளாண் அலுவலர் பணிக்கு வெற்றி பெற்ற வேளாண் மாணவர்களை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன், மாவட்டச் செயலாளர் குமரவேல், நிர்வாகிகள் லெனின் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்களிடம் பேசிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் கதிரேசன், சிண்டிகேட் உறுப்பினர் சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்கள் அரசிடம் பேசி இது குறித்து முடிவு எடுப்பதாக உறுதிகூறியுள்ளனர்.

 

சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், சரியான முடிவு வரும் வரை மாணவர்கள் இரவு பகல் என தொடர்ந்து தொடர் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளனர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலியல் சமத்துவ பயிற்சி பட்டறை

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Gender Equality Workshop at Annamalai University

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து பாலியல் சமத்துவத்தைப் பற்றிய 3 நாட்கள் பயிற்சி பட்டறை பல்கலைக்கழக மக்களியல் துறையில் நடைபெற்றது. மக்களியல் துறை உதவிப் பேராசிரியர் க. மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். கலைப்புல தலைவர் விஜயராணி தலைமை தாங்கிப் பேசினார். துறைத் தலைவர் ரவிசங்கர் பயிற்சி பட்டறை பற்றிய தொகுப்பு உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆளவை மன்ற உறுப்பினர் பேராசிரியர் அரங்க பாரி, ராஜீவ்காந்தி தேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியர் வசந்தி ராஜேந்திரன், சிதம்பரம் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்குப் பாலியல் சமத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ - மாணவியர்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரி மாணவ - மாணவியர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். மக்களியல் துறை இணைப் பேராசிரியர் பீமலதா தேவி நன்றியுரை வழங்கினார்.

Next Story

‘மீண்டும் கல்லூரிக்குப் போகலாம்’ - குடும்பத்தினருடன் பொன்விழாவைக் கொண்டாடிய முன்னாள் மாணவர்கள்!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Ex-students who celebrated Golden Jubilee with their families at annamalai university

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 1970 முதல் 1974 ஆம் ஆண்டில் வேளாண் கல்லூரியில் 45 மாணவர்கள் பயின்றனர். கல்வி பயின்ற பிறகு அவர்கள் மத்திய - மாநில அரசின் பல்வேறு துறைகளில் வங்கி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட  பல்வேறு துறைகளில் பணியாற்றி பணி நிறைவு பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, ‘AU74 அக்ரி பட்டதாரிகள் சங்கம்’ என்ற சங்கத்தை அமைத்து,  அரசுப் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். மேலும் அவர்கள், பல்வேறு கல்லூரிகளில் பயிலும் வேளாண் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகின்றனர்.

இவர்கள் கல்வி பயின்று 50 ஆண்டுகள் கடந்த நிலையில், குடும்பத்தினருடன் இணைந்து 50 ஆம் ஆண்டு பொன்விழாவை (1974 - 2024) பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் கொண்டாடினார்கள். இவ்விழாவுக்கு சங்கத்தின் தலைவர் அக்ரி நடராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராகப் பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசன் கலந்துகொண்டு, முன்னாள் மாணவர்களை பாராட்டி பொன்விழா ஆண்டு மலரை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

இதில் பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேலு,  தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், வேளாண் புல தலைவர் அங்கயற்கண்ணி மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்த முன்னாள் பேராசிரியர்கள் பாலசுப்ரமணியன், கோவிந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு முன்னாள் மாணவர்களைப் பாராட்டி மலரும் நினைவுகளை நினைவுகூர்ந்து வாழ்த்தினார்கள்.

Ex-students who celebrated Golden Jubilee with their families at annamalai university

மேலும், அங்கு பயின்ற முன்னாள் வேளாண் மாணவர்கள் வேளாண் கல்லூரிக்கு, சங்கத்தின் சார்பாக ரூ. 3 லட்சம் செலவில் உபகரணங்கள், அறைகள் புதுப்பித்தல் போன்ற உதவிகளைச் செய்வதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து குடும்பத்துடன் அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, ‘50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை குடும்பத்துடன் சந்தித்த நிகழ்வு மறக்க முடியாத ஒன்றாக உள்ளது’ என்று கூறினார்கள்.