Skip to main content

அண்ணாமலைப் பல்கலைக்கழக விடுதியில் மாணவிகள் நள்ளிரவில் போராட்டம்

Published on 27/04/2019 | Edited on 27/04/2019

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு பல்கலைக்கழக வளாகத்தில் விடுதிகள் உள்ளது. இதில் தாமரை விடுதியில் 500-க்கும் மேற்பட்ட முதுநிலை பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவிகள் தங்கியுள்ளனர்.

 

protest

 

பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதிக் கட்டணத்தை ஒவ்வொரு மாணவருக்கும் 5 ஆயிரம் முதல் திடீரென உயர்த்தியுள்ளது. இதனால்  விடுதியில் தங்கி படிக்கும் ஏழை எளிய மாணவிகளுக்கு அரசிடமிருந்து ஸ்காலர்ஷிப் குறைவாக வந்துள்ளது. ஆகையால் மாணவிகள் ஒவ்வொருவரும் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை விடுதிக் கட்டணத்தை உடனே கட்ட வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளது.
 

மாணவிகள் தேர்வில் கலந்துகொள்ள விடுதியில் இருந்து கட்டணம் பாக்கி இல்லை என்ற சான்று கொடுத்தால்தான் தேர்வு எழுத முடியும். இந்த நிலையில் மாணவிகள் உயர்த்தப்பட்ட விடுதிக் கட்டணத்தை கட்டாததால் கட்டண பாக்கி இல்லா சான்றிதழ் கொடுக்காமல் பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்துள்ளது. இதனால் மாணவிகள் தேர்வு நேரத்தில் திடீர் என்று எங்களால் எப்படி உயர்த்தப்பட்ட விடுதிக் கட்டணத்தை உடனே கட்ட முடியும்.  உயர்த்தப்பட்ட விடுதி கட்டணத்தை ரத்து செய்து தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று விடுதியின் உள்ளே வெள்ளிக்கிழமை  இரவு உணவை தவிர்த்து நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த நிர்வாகம் மாணவிகளின் போராட்டத்தை ஒடுக்க மின்விளக்குகளை அணைத்துள்ளனர். இதனை கண்டுகொள்ளாத மாணவிகள் இருளிலும் செல்போன் விளக்குகளை எரியவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்தும் உயர்த்தப்பட்ட விடுதிக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Next Story

‘போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
School Education Department takes action on Action against the protesting teachers

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அதில் குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம், பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடந்தது. இதனையடுத்து, தமிழக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்த நிலையில், 19 நாள்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியதாவது, ‘சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 8, 2024 வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். 

அதில், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாள்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும், 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. .