Skip to main content

மகள் மீது கோவம்... தற்கொலை செய்துகொண்ட தம்பதி!

Published on 06/09/2021 | Edited on 06/09/2021

 

Angry over daughter ... Couple passed away

 

பெற்றோரின் சொல்லைக் கேட்காமல் மகள் காதல் திருமணம் செய்துகொண்டதால் மனமுடைந்த தந்தை மற்றும் தாய், விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ளது கம்மாளக் குட்டை கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள பண்ணாரியம்மன் நகரைச் சேர்ந்தவர்கள் பழனிச்சாமி (58) - சுமதி (48) தம்பதி. இவர்களுக்கு ஜனனி (22) என்ற மகள் உள்ளார். இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் ஃபிசியோதெரபி மருத்துவப் படிப்பு இறுதியாண்டு படித்துவருகிறார். ஜனனி, குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய கோழி இறைச்சி கடை நடத்திவருபவரைக் காதலித்துள்ளார்.

 

இதனை அறிந்த பெற்றோர்கள் தனது மகளைக் கண்டித்தும், காதலைக் கைவிடக் கோரியும் தொடர்ந்து வலியுறுத்திவந்துள்ளனர். ஆனாலும் ஜனனி தனது காதலைக் கைவிடவில்லை. மேலும், ஜனனி கடந்த 2ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அதேபோல் அவர்கள் திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படத்தை செல்ஃபோனில் பார்த்து பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று (05.09.2021), பழனிச்சாமி தனது தாயின் திதிக்கு சாமி கும்பிட வீட்டிற்கு வரச் சொல்லி உறவினர்கள் பலரையும் அழைத்துள்ளார். அவரது அழைப்பை ஏற்று நேற்று காலை உறவினர்களும் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் நுழைந்த உறவினர்கள் பழனிச்சாமி - சுமதி இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

தகவல் அறிந்த காவல்துறையினர் தம்பதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்தனர். விசாரணையில், படிக்காத 44 வயதானவரை மகள் காதல் திருமணம் செய்துகொண்டதால் மனமுடைந்த தம்பதி, தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததால், வாழைப்பழத்தில் விஷ மாத்திரைகளை வைத்து சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் விசாரணையில் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்து காவல்துறையினர் விசாரனை நடத்திவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜிஎஸ்டி குறித்து கேள்வி; இளம்பெண் மீது பாஜகவினர் தாக்குதல்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Question about GST; BJP issue on young girl

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் திருப்பூர் ஆத்துப்பாளையத்தில் பிரசாரத்துக்கு சென்ற பாஜகவினரிடம் சானிட்டரி நாப்கினுக்கு கூட ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது பற்றி இளம்பெண் சங்கீதா என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பாஜகவினர் இளம் பெண்னிடம் தகாத வார்த்தைகளில் பேசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பா.ஜ.க நிர்வாகி சின்னசாமி என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து சங்கீதா வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முதலில் கோவையில் பாஜக வன்முறை. அடுத்து திருப்பூரில் கோழைத்தனமாக தன்னந்தனியாக நின்ற ஒரு இளம் பெண் மீது கொலைவெறித் தாக்குதல். கோவையில் பாஜகவுக்கு தோல்வி நிச்சயம் என்றதும் வன்முறை வெறியாட்டம் ஆடத் துவங்கியுள்ளது பாஜக. திருப்பூரிலும் ஒரு பெண்மணி ஜி.எஸ்.டி அநியாயங்கள் குறித்து துணிவாகவும் நேர்மையாகவும் கேட்டதற்கு பா.ஜ.க.வின் 5 தடியர்கள் சேர்ந்து அந்த இளம் பெண்ணை தாக்கியுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இந்த அடாவடி அராஜகக் கூட்டம் அமைதியான கோவை - திருப்பூருக்கும் தமிழ்நாட்டுக்கும் தேவையா? சிந்தியுங்கள் என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

Question about GST; BJP issue on young girl

முன்னதாக கோவை மாவட்டம் சிங்காநல்லுர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவாரம்பாளைம் 28ஆவது வார்டு பகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி நேற்று (11.04.2024) இரவு 10.40 மணியளவில் பாஜகவினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தட்டிக்கேட்ட திமுகவினரை பாஜகவினர் அடித்து உதைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாஜகவைச் சார்ந்த ஆனந்தகுமார், மாசானி உள்ளிட்டோர் மீது 294 பி, 323, 147 உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து; 5 பேர் பலியான சோகம்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
incident for tirupur vellakoil car and govt bus

திருப்பூரில் அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே ஓலப்பாளையம் என்ற பகுதியில் திருப்பூரில் இருந்து திருச்சிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதே போன்று திருப்பூரில் உள்ள நல்லிக்கவுண்டன் வலசு என்ற பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் தனது காரில் குடும்பத்தினர் 6 பேருடன் பயணம் செய்துள்ளார். இவர்கள் திருக்கடையூரில் உள்ள கோவிலுக்கு ஆன்மிக பயணம் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் தான் ஓலப்பாளையத்தில் இன்று (09.04.2024) அதிகாலை நேருக்கு நேர் எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே  காரில் பயணித்த இளவரசன் (வயது 26), சந்திரசேகரன் (வயது 60), சித்ரா (வயது 57), அறிவித்ரா (வயது 30) மற்றும் 3 மாத பெண் குழந்தை சாக்சி ஆகிய 5 பேரும் உயிரிழந்தனர். மேலும் சசிதரன் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து வெள்ளக்கோயில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.