Skip to main content

“தமிழக முதல்வர் கொண்டுவரும் அனைத்து திட்டங்களும் பெண்களுக்கான நலத்திட்டங்களே!” - அமைச்சர் ஐ.பெரியசாமி  

Published on 19/10/2021 | Edited on 19/10/2021

 

"All the schemes brought by the Chief Minister of Tamil Nadu are welfare schemes for women!" - Minister I. Periyasamy

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஒன்றியத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா சின்னாளபட்டியில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை தாங்கினார். விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகக் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  

 

அப்போது சமுதாய வளைகாப்பில் கலந்துகொண்ட கர்ப்பிணிப் பெண்கள் அனைவருக்கும் தாய்வீட்டில் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தும் போது வழங்கப்படும் உணவு வகைகள் அனைத்தையும் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்க கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவிட்டதோடு அதற்கான நிதியும் கொடுத்து இந்நிகழ்ச்சியில் வளைகாப்பு நிகழ்ச்சியில் வழங்கப்படும் உணவு வகைகள் பரிமாறப்பட்டது. மேலும், 200 கர்ப்பிணிப் பெண்களுக்கு எவர்சில்வர் தாம்பூலத்தட்டு, சேலை, பிளாஸ்டிக் கூடை, பழங்கள், திருமாங்கல்ய கயிறு, வளையல், சந்தனம், குங்குமம் ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டன. 

 

அதன் பிறகு பேசிய ஐ.பெரியசாமி, “கரோனா தொற்று காலத்தில் தைரியமாக 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் இந்த மண்டபத்தில் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருக்கிறீர்கள் என்றால் அதற்கு ஒரே காரணம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தான்.  வாழையடி வாழை என்பார்கள் அதுபோல பெண் இனத்திற்காகவும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் அயராது பாடுபட்ட ஒப்பற்றத்தலைவர் கலைஞர் வழியில் அவரது வாரிசான மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின் போட்ட முதல் கையெழுத்தில் தொடங்கி இன்றுவரை நிறைவேற்றிவரும் அனைத்து திட்டங்களும் பெண்களுக்கான நலத் திட்டங்களே.

 

தமிழக அரசு பொருளாதார நெருக்கடியிலும் பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணத் திட்டத்தை அறிவித்தது. பெண்கள் முன்னேற்றத்திற்காக அவர் செயல்படுத்திய திட்டமே இது.  இதன் மூலம் நூற்றுக் கணக்கான பெண் கூலித் தொழிலாளிகள், சிறு வியாபாரிகள் பல கிராமங்களுக்குச் சென்று வேலை பார்த்து வருவதோடு வியாபாரமும் செய்துவருகின்றனர். இதன் மூலம் தினசரி அவர்களுக்கு 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை மிச்சமாகின்றது. அதன் மூலம் அவர்களின் சிறுசேமிப்பும் உயர்கிறது.  சின்னாளபட்டியில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தைத் தரம் உயர்த்துவதோடு பொதுமக்களுக்கான அனைத்து நலத்திட்டங்களும் விரைவில் நிறைவேற்றப்படும்” என்று கூறினார். இந்தவிழாவில் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் தண்டபாணி, ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன், ரெட்டியார் சத்திரம் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் கு.சத்தியமூர்த்தி உட்படக் கட்சி பொறுப்பாளர்களும் அதிகாரிகளும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

கட்சி பொறுப்பாளர்களுடன் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆலோசனை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Minister I.Periyasamy consultation with party officials!

ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவால் ஆத்தூர் தொகுதியில் கிளைக்கழகம் முதல் ஒன்றிய கழகம் வரை உள்ள திமுக கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அமைச்சரின் உத்தரவுப்படி மகளிர் அணியினர், பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் வீடுவீடாக சென்று அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத் தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 45 வருடங்களாக உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு வந்த திமுகவினர் முதல் முறையாக கூட்டணி கட்சி சின்னமான அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகின்றனர். இந்திய கூட்டனியில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டனியில் சிபிஎம் கட்சி சார்பாக போட்டியிடும் ஆர்.சச்சிதானந்தத்தின் வெற்றிக்காக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தேர்தல் பணி ஆற்றிவருகிறார்.

Minister I.Periyasamy consultation with party officials!

அத்தோடு, கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், பேரூர் கழக செயலாளர்கள், தலைவர்கள், ஒன்றிய பெருந்தலைவர்கள், மாவட்ட பிரதிநிதிகள் உட்பட அனைவரையும் ஆத்தூர் தொகுதி முழுவதும் திமுக நிர்வாகிகள் பம்பரம்போல் சுழன்று தேர்தல் பணியாற்றி அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்க வைத்துள்ளார்.

இதனிடையே, அமைச்சர் ஐ.பெரியசாமி தொகுதியில் உள்ள ரெட்டியார்சத்திரம் உட்பட சில தேர்தல் அலுவலகங்களுக்கு சென்று அங்குள்ள கட்சி பொறுப்பாளர்களிடம் தொகுதி நிலவரங்களை கேட்டறிந்து   சச்சிதானந்தம் வெற்றிக்காக உழைக்க வேண்டும். அதோடு நமது வெற்றி இந்திய அளவில் பேசப்படுவதாகவும் இருக்க வேண்டும்.  அந்த அளவுக்கு நீங்கள் தேர்தல் பணியில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று கூறி வருகிறார்.