Skip to main content

பெண் தாதாவின் சாராயக் கும்பல் வாஷ் அவுட்... நிம்மதி பெருமூச்சு விட்ட வாணியம்பாடி!

Published on 11/04/2022 | Edited on 11/04/2022

 

Alcohol gang arrest of female Dada Maheshwari ... Peace Vaniyambadi

 

கடந்த 27 ஆண்டுளாக பாக்கெட் சாராயம் விற்று வந்த பெண் தாதாவை கைது செய்யப்பட்ட சம்பவம் வாணியம்பாடி, திருப்பத்தூர் மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.

 

Alcohol gang arrest of female Dada Maheshwari ... Peace Vaniyambadi

 

வாணியம்பாடி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் 1990-களிலேயே சாராய விற்பனையில் இறங்கியவர் மகேஸ்வரி. இதுவரை சுமார் 80 மேற்பட்ட வழக்குகள், அதிலும் 7 முறை குண்டர் சட்டம் என பெண் தாதாவாகவே அறியப்பட்டார் மகேஸ்வரி. சட்டவிரோதமாக மகேஸ்வரி விற்கும் பாக்கெட் சாராய விற்பனை குறித்து போலீசாருக்கு தகவலளிப்பவர்கள் மீது தாக்குதல் மட்டுமில்லாது கொலை வரை செல்லும் அளவிற்கு சம்பவங்கள் நிகழ்ந்து அடிக்கடி வணியம்பாடியை பரபரப்பாக்கும். சில தினங்களுக்கு முன்பு திருவிழாவில் கள்ளச்சாராயம் விற்ற நபர்கள் மீது புகாரளித்த இளைஞர்கள் சிலர் மீது மகேஸ்வரியின் ஆட்கள் தாக்குதல் நடத்தியது பரபரப்பாக பேசப்பட்டது. இதனை கண்டித்து நேதாஜி நகர் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Alcohol gang arrest of female Dada Maheshwari ... Peace Vaniyambadi

 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப்பகுதி இளைஞர்கள் மகேஸ்வரிக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்டிருந்த பாக்கெட் சாராய மூட்டைகளை பறிமுதல் செய்து அழித்தனர். இளைஞர்கள் கைப்பற்றிய சாராய மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்ய முயன்ற நிலையில், மகேஸ்வரி மற்றும் அவரது கும்பலை கைது செய்தால்தான் மூட்டைகளை தருவோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படி தொடர்ந்து அதிக எதிர்ப்புகள், போராட்டங்கள் எழுந்த நிலையில் மகேஸ்வரியை கைது செய்ய திட்டமிட்ட போலீசார் அவரை கைது செய்ய முற்பட்டனர்.

 

Alcohol gang arrest of female Dada Maheshwari ... Peace Vaniyambadi

 

மகேஸ்வரி திருவண்ணாமலையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு விசாரணையில் தகவல் வர, அங்கு சென்ற போலீசார் விடிய விடிய தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் சாராய வியாபாரி மகேஸ்வரி, அவரது கணவர் சீனிவாசன் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் வாணியம்பாடி சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 க்கும் மேற்பட்ட மகேஸ்வரியின் அடியாட்களும் கைது செய்யப்பட்டனர். வாணியம்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது  இந்த கும்பலின் கைது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஆவடி கொள்ளை சம்பவம்; வெளியான புதிய தகவல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
avadi jewelry incident New information released 

சென்னையை அடுத்துள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் ‘கிருஷ்ணா ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடைக்கு நேற்று (15.04.2024) நண்பகல் 12 மணியளவில் 5 மர்ம நபர்கள் தமிழக பதிவெண் கொண்ட மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்துள்ளனர். இவர்களில் 4 பேர் கடையின் உரிமையாளரான பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டுத் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்தக் கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதியப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு நகைக்கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டிருந்தனர். இது குறித்து கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ‘பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களைப் பிடிக்க 8 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றோம். மேலும், கொள்ளையர்கள் வந்த காரின் எண் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அடையாளங்களை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியை மேலும் தீவிரப்படுத்தி வருகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார். 

avadi jewelry incident New information released 

இந்நிலையில் இந்த நகைக்கடையில் கைவரிசை காட்டியது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களின் காரை பின் தொடர்ந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் கொள்ளையர்கள் காரை பயன்படுத்தாமல் ரயில் அல்லது விமானம் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும், கொள்ளையர்கள் இன்று (16.04.2024) மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் பதிவெண்ணை கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.