Skip to main content

எங்களை மட்டும் அனுமதி வாங்க சொல்வது ஏன்? - போலீசாரிடம் வாக்குவாதம் செய்த அதிமுக தொண்டர்கள்

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

AIADMK members had an argument with the villupuram police

 

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் உள்ளது விழுப்புரம். இந்த நகரில் உள்ள நான்கு முனை சந்திப்பில் சாலையோரமாக பல்வேறு அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று காலை அதிமுக தெற்கு, வடக்கு நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ் ஆகியோர் தலைமையில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் அந்த இடத்தில் கொடிக்கம்பம் நடுவதற்கு ஏற்பாடு செய்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உரிய அனுமதி பெறாமல் கொடிக்கம்பம் நடக்கூடாது என்று தடுத்து நிறுத்தினர். 

 

இதனால் கோபமடைந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் எந்த அனுமதியும் இல்லாமல் இந்த இடத்தில் நிறுவப்பட்டுள்ளன. அப்படி இருக்கும் போது எங்களை மட்டும் அனுமதி வாங்கி வந்து கொடிக்கம்பம் நடுமாறு கூறுவது ஏன்? என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இதற்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் படைத்த கோட்டாட்சியர் இங்கே நேரில் வந்து எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் இங்கிருந்து நகர மாட்டோம் என்று தெரிவித்தனர்.

 

இதையடுத்து போலீசார் அதிமுக நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் கோட்டாட்சியர் ரவிச்சந்திரனிடம் மனு கொடுத்தனர். கோட்டாட்சியர் இது குறித்து ஆய்வு செய்து பிறகு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தார். அதுவரை அமைதியாக இருக்குமாறு கூறி அதிமுகவினரை அனுப்பி வைத்தார்.

 

இதையடுத்து பாமக மாவட்ட செயலாளர் தங்க ஜோதி, தேமுதிக நகர செயலாளர் மணிகண்டன் போன்றவர்கள் அதே இடத்தில் கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி தருமாறு கோட்டாட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். இந்த பரபரப்பான சம்பவம் காரணமாக சுமார் அரை மணி நேரம் நான்கு முனை சந்திப்பில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் யாரும் அனுமதி பெறாமல் கொடிக்கம்பம்  நடக்கூடாது என்பதற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொடிக்கம்பம் நடும் பிரச்சனை விழுப்புரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.