Skip to main content

“வாக்கு எண்ணும் மையத்தின் தகரச் சீட்டுகளை உடைத்தெறிவோம்”- மிரட்டல் விடுத்த அதிமுக வேட்பாளர் மீது வழக்கு!

Published on 11/10/2021 | Edited on 11/10/2021

 

AIADMK candidate sued for threatening to break tin slips

 

ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வந்தது. இதில்  இரண்டாவது கட்ட தேர்தல் வாக்களிப்பு கடந்த ஒன்பதாம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் அதிமுக வேட்பாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நாம் விசாரித்ததில், இந்த ஒன்றியத்திலுள்ள பேரங்கியூர், ஆனத்தூர், கருவேப்பிலைபாளையம், பெரியசெவலை, ஆம்பூர், கொளத்தூர், சித்தலிங்கமடம், எடப்பாளையம் உட்பட 50 ஊராட்சிகளுக்கும் அதில் அடங்கிய கிராமப்புற வார்டுகளுக்கும் ஒன்றிய, மாவட்ட குழு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடந்து முடிந்தது.

 

இது சம்பந்தமான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் திருவெண்ணெய் நல்லூரில் உள்ள காந்தி நினைவு மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு பாதுகாப்பில் இருந்து வருகின்றது. நாளை 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் அதற்கான வேட்பாளர்களின் ஏஜெண்டுகளை நியமிக்கும் பணி நடந்து வருகிறது. இதில் அதிமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளராக வழக்கறிஞர் உதயகுமார் மற்றும் அக்கட்சியினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குச் சென்று தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமாரிடம் வாக்கு எண்ணிக்கையின் போது அதிகமான அளவில் முகவர்களை நியமிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார், ஒரு அறைக்கு இரண்டு பேர் வீதம் ஆறு பேர் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளரையும் சேர்த்து ஏழு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

 

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அதிகப்படியான முகவர்களை அனுப்பவேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிமுக வேட்பாளர், ‘வாக்கு எண்ணும் மையத்தின் மீது தடுப்புக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ள தகரச் சீட்டுகளை நாங்கள் உடைத்தெறிவோம்’ என அச்சுறுத்தும் வகையில் மிரட்டல் விடுத்துள்ளனர். இவர்கள் மிரட்டல் குறித்த வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்திற்கு சென்று அதிமுக வேட்பாளர் உதயகுமார் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மீது புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்பதாகவும் அரசுப் பணியைச் செய்யவிடாமல் அதன் ஊழியரைத் தடுத்தது உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருவெண்ணெய்நல்லூர் பகுதி மக்கள் மத்தியில்  பெரும் அச்சத்தைப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.