Skip to main content

மக்களவை தேர்தலுக்கு பிறகும் அதிமுக, பாஜக ஆட்சி தொடரும்! ஜி.கே.வாசன் நம்பிக்கை!!

Published on 10/05/2019 | Edited on 10/05/2019

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் நடைபெற உள்ள தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெள்ளிக்கிழமை (மே 10) ஆத்தூருக்கு வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

 

gk vasan

 

இப்போது நடந்து கொண்டிருக்கும் மக்களவை தேர்தலில், பாஜக அரிதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும். அதேபோல தமிழகத்திலும் 22 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெற்று, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி தொடரும். மக்களின் நம்பிக்கையைப் பெற்ற இந்த கூட்டணி, இந்த மக்களவை தேர்தலுக்குப் பிறகும் தொடர்ந்து ஒத்த கருத்துடன் செயல்படும்.

 

 

தமிழக சிறையில் இருக்கும் ராஜிவ் கொலை வழக்கு தொடர்புடைய குற்றவாளிகள் 7 பேரையும் விடுவிப்பதில் ஆளுநர் முடிவே இறுதியானது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விரைவில் ஆளுநர், 7 பேரின் விடுதலை தொடர்பாக நல்ல முடிவினை அறிவிப்பார். 

 

 

எதிர்க்கட்சிகள் தங்களுக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் இல்லை என்பதால் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் கோட்பாடுகளுக்கு ஏற்ப அவர்கள் நல்ல முறையில் செயலாற்றிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

 

 

இந்த சந்திப்பின்போது, ஆத்தூர் நகர த.மா.கா. தலைவர் சண்முகம், மாநில இளைஞர் அணி துணை பொதுச்செயலாளர் சத்தியா, வழக்கறிஞர் செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக, சேலம் கிழக்கு மாவட்ட த.மா.கா. நிர்வாகிகள் ஜி.கே.வாசனுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.