Skip to main content

பட்டியிலன சமூக மக்களின் வீடுகளை அடித்து சேதப்படுத்திய மாற்று சமூக கும்பல்

Published on 28/09/2022 | Edited on 28/09/2022

 

Aditiravida people houses are damaged by other people

 

சிதம்பரம் அருகே எண்ணாநகரம் கிராமம் வழியாக கடந்த சில நாட்களாக சில இளைஞர்கள் இருசக்கரவாகனத்தில் வேகமாக ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் தெருக்களில் சென்று வருகிறார்கள். இதற்கு அப்பகுதியில் உள்ளவர்கள் இந்த தெருவில் பள்ளிகூடம் உள்ளது குழந்தைகள் வந்து செல்லுமிடம் அதனால் மெதுவாக செல்லுங்கள் என கூறிவருகிறார்கள்.

 

இந்நிலையில் 27-ந் தேதி செவ்வாய்கிழமை காலை 9 மணிக்கு எண்ணாநகரம் கிராம சாலையில் கண்ணங்குடி கிராமத்தை சேர்ந்த 18 வயது இளைஞர், இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளார். அதற்கு அதே ஊரைச் சேர்ந்த அருண்குமார் எவ்வளவு நாளைக்கு தான் மெதுவாக போங்க என சொல்றது என கேட்டுள்ளார். இதற்கு அந்த 18 வயது இளைஞர் நீயெல்லாம் இப்படி பேசுறளவுக்கு வந்துட்டியா என அசிங்கமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதனம் செய்து அனுப்பியுள்ளனர்.

 

இந்நிலையில் அதேநாளில் மதியதிற்கு மேல் அந்த 18 வயது இளைஞர் மற்றும் அவரது அண்ணன் பிரேம், கண்ணங்குடி கிராமத்தை சேர்ந்த வீரமணி, சுகுமார், சசி, முத்துகுமார், தினேஷ் உள்ளிட்ட சிதம்பரம், கீழமணக்குடி, குறியாமங்கலம் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து 40க்கும் மேற்பட்ட மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞர்களை திரட்டிகொண்டு எண்ணாநகரம் கிராமத்திற்கு வந்து அருண்குமார் வீட்டிற்கு கையில் கட்டை இரும்பு பைப்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்றுள்ளனர். அப்போது அருண்குமார் வீட்டில் இல்லாததால் வீட்டை தாக்க முயற்சித்தபோது அங்கிருந்தவர்கள் இவர்களை தடுத்துள்ளனர். தடுத்தவர்களை இவர்கள் சராமாரியாக தாக்கி இவர்களின் வீட்டையும் வீட்டில் உள்ள பொருட்களையும் அடித்துள்ளனர்.

 

இவர்கள் தாக்கியதில் கீரப்பாளையம் இந்திய ஜனநாய வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் கவியரசன்(28) மற்றும் மச்சகேந்திரன் (65) ஆகிய இருவருக்கும் தலையில் பலமாக அடிபட்டதால் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் தலையில் தையல்போட்டு சிகிச்சை பெற்று வருகிறனர். மேலும் அதே ஊரை சேர்ந்த மங்கையர்கரசி உள்ளிட்ட 6 பேருக்கு தாக்குதலில் சிறுகாயங்கள் ஏற்பட்டது.

 

இந்நிலையில் 40 பேர் கொண்ட கும்பலில் தாக்கவந்த மாற்று சமூகத்தை சேர்ந்த வீரமணி மற்றும் சுகுமாரை அப்பகுதியில் இருந்தவர்கள் பிடித்து வீட்டில் அடைத்து வைத்து அவர்கள் எடுத்து வந்த 2 இருசக்கர வாகனத்தையும் சிதம்பரம் தாலுக்கா காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில் மதியம் 1 மணி அளவில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு உடனே தகவல் அளித்தும் மாலை வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் தலைமையில் கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் செல்லையா, வாலிபர் சங்க தலைவர் ஆசியஜோதி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவர்கள் சிதம்பரம் தாலுக்கா காவல்நிலையத்தை இரவு 8 மணிக்கு திடீரென முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து காவல்துறையினர் சரியான நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதி கூறியதின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.