Skip to main content

பட்டியிலன சமூக மக்களின் வீடுகளை அடித்து சேதப்படுத்திய மாற்று சமூக கும்பல்

Published on 28/09/2022 | Edited on 28/09/2022

 

Aditiravida people houses are damaged by other people

 

சிதம்பரம் அருகே எண்ணாநகரம் கிராமம் வழியாக கடந்த சில நாட்களாக சில இளைஞர்கள் இருசக்கரவாகனத்தில் வேகமாக ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் தெருக்களில் சென்று வருகிறார்கள். இதற்கு அப்பகுதியில் உள்ளவர்கள் இந்த தெருவில் பள்ளிகூடம் உள்ளது குழந்தைகள் வந்து செல்லுமிடம் அதனால் மெதுவாக செல்லுங்கள் என கூறிவருகிறார்கள்.

 

இந்நிலையில் 27-ந் தேதி செவ்வாய்கிழமை காலை 9 மணிக்கு எண்ணாநகரம் கிராம சாலையில் கண்ணங்குடி கிராமத்தை சேர்ந்த 18 வயது இளைஞர், இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளார். அதற்கு அதே ஊரைச் சேர்ந்த அருண்குமார் எவ்வளவு நாளைக்கு தான் மெதுவாக போங்க என சொல்றது என கேட்டுள்ளார். இதற்கு அந்த 18 வயது இளைஞர் நீயெல்லாம் இப்படி பேசுறளவுக்கு வந்துட்டியா என அசிங்கமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதனம் செய்து அனுப்பியுள்ளனர்.

 

இந்நிலையில் அதேநாளில் மதியதிற்கு மேல் அந்த 18 வயது இளைஞர் மற்றும் அவரது அண்ணன் பிரேம், கண்ணங்குடி கிராமத்தை சேர்ந்த வீரமணி, சுகுமார், சசி, முத்துகுமார், தினேஷ் உள்ளிட்ட சிதம்பரம், கீழமணக்குடி, குறியாமங்கலம் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து 40க்கும் மேற்பட்ட மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞர்களை திரட்டிகொண்டு எண்ணாநகரம் கிராமத்திற்கு வந்து அருண்குமார் வீட்டிற்கு கையில் கட்டை இரும்பு பைப்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்றுள்ளனர். அப்போது அருண்குமார் வீட்டில் இல்லாததால் வீட்டை தாக்க முயற்சித்தபோது அங்கிருந்தவர்கள் இவர்களை தடுத்துள்ளனர். தடுத்தவர்களை இவர்கள் சராமாரியாக தாக்கி இவர்களின் வீட்டையும் வீட்டில் உள்ள பொருட்களையும் அடித்துள்ளனர்.

 

இவர்கள் தாக்கியதில் கீரப்பாளையம் இந்திய ஜனநாய வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் கவியரசன்(28) மற்றும் மச்சகேந்திரன் (65) ஆகிய இருவருக்கும் தலையில் பலமாக அடிபட்டதால் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் தலையில் தையல்போட்டு சிகிச்சை பெற்று வருகிறனர். மேலும் அதே ஊரை சேர்ந்த மங்கையர்கரசி உள்ளிட்ட 6 பேருக்கு தாக்குதலில் சிறுகாயங்கள் ஏற்பட்டது.

 

இந்நிலையில் 40 பேர் கொண்ட கும்பலில் தாக்கவந்த மாற்று சமூகத்தை சேர்ந்த வீரமணி மற்றும் சுகுமாரை அப்பகுதியில் இருந்தவர்கள் பிடித்து வீட்டில் அடைத்து வைத்து அவர்கள் எடுத்து வந்த 2 இருசக்கர வாகனத்தையும் சிதம்பரம் தாலுக்கா காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில் மதியம் 1 மணி அளவில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு உடனே தகவல் அளித்தும் மாலை வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் தலைமையில் கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் செல்லையா, வாலிபர் சங்க தலைவர் ஆசியஜோதி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவர்கள் சிதம்பரம் தாலுக்கா காவல்நிலையத்தை இரவு 8 மணிக்கு திடீரென முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து காவல்துறையினர் சரியான நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதி கூறியதின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.