Skip to main content

புகைப்படங்களை வெளியிட்ட விவகாரம் : பவ்னிந்தர் சிங் மீது அவதூறு வழக்குத் தொடர நடிகை அமலாபாலுக்கு அனுமதி!

Published on 03/11/2020 | Edited on 03/11/2020

 

Actress Amala Pal allowed to file defamation suit against Bavninder Singh


முன்னாள் நண்பர் மீது அவதூறு வழக்குத் தொடர  நடிகை அமலாபாலுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

'ஆடை' என்ற படத்தில் உடையில்லாமல் நடித்து அனைவரையும் அதிர வைத்தவர் நடிகை அமலாபால். இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்துப் பெற்றவர். இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங், அமலாபாலுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

 

அமலாபாலுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பவ்னிந்தர் சிங்,  சிறிது நேரத்தில் அவற்றை நீக்கிவிட்டார். இந்த நிலையில், நடிகை அமலாபால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.


அந்த மனுவில், முன்னாள் நண்பர் பவ்னிந்தர் சிங், தன்னுடன் எடுத்த புகைப்படங்களையும், தனக்கும் அவருக்கும் திருமணம் ஆகிவிட்டதாக வெளியிட்டுள்ள புகைப்படங்களையும் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும், மேலும் அவர் மீது சிவில் அவதூறு வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

 

இந்த மனு,  நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், சிவில் அவதூறு வழக்குத் தொடர அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இறைவனாய் தந்த இறைவியே…' - திருமண கோலத்தில் அமலா பால்

Published on 06/11/2023 | Edited on 06/11/2023

 

 

 

அமலா பால், அவரது கடந்த பிறந்தநாளன்று அவரின் நண்பர் ஜகத் தேசாய் ப்ரபோசலுக்கு சம்மதம் தெரிவித்தார். மேலும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில் கேரளா மாநிலம், கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஜகத் தேசாயை அமலா பால் திருமணம் செய்துகொண்டார். நேற்று நடந்த (05.11.2023) இந்த திருமணத்தில் மணமக்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். 

 


 

Next Story

'அவனும் நானும்' - திருமணத்திற்கு ரெடியான அமலா பால்

Published on 26/10/2023 | Edited on 26/10/2023

 

amala paul wedding announcemnet

 

தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்த அமலா பால், கடைசியாக 'கடாவர்' படத்தில் நடித்திருந்தார். முதன்மை கதாபாத்திரத்தில் அவர் நடித்த இப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் பெரிதளவு பேசப்படவில்லை. இப்போது மலையாளத்தில் பிரித்விராஜின் 'ஆடுஜீவிதம்' மற்றும் இன்னும் இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார். 

 

இந்த நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் அமலாபால், அவரது நண்பர் ஜனா தேசாய், ப்ரொபோஸுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், அமலா பாலின் நண்பர் ஜகத் தேசாய், அமலா பாலுக்கு ப்ரொபோஸ் செய்கிறார். அதை ஏற்றுக்கொண்ட அமலாபால் அவருடன் இணைந்து நடனமாடுகிறார். இதன் மூலம் இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளதாக தெரிகிறது. இதனால் பலரும் அமலா பாலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 

கடந்த 2014ஆம்  ஆண்டு இயக்குநர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அமலா பால். பின்பு 2017 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். 2020 ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த பாடகர் பவ்நிந்தர் சிங்குடன், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக தகவல் வெளியானது. மேலும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இணையதளத்தில் வைரலானது. ஆனால் இதை அமலா பால் அந்த புகைப்படங்கள் வெறும் ஃபோட்டோஷூட் தான் என மறுத்துவிட்டார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jagat Desai (@j_desaii)