Skip to main content

சர்ச்சைக்குள்ளான நடிகர் பிரித்விராஜ் ட்வீட்... போராட்டத்தில் இறங்கிய அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள்!

Published on 26/10/2021 | Edited on 26/10/2021

 

Controversial actor Prithviraj tweets, Politicians and public who involved the struggle!

 

தென்மேற்கு பருவமழை தொடங்கியிருப்பதால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதன் மூலம் அணையின் நீர் மட்டமும் 140 அடியை நெருங்கிக்கொண்டு வருகிறது. அதைக் கண்ட கேரளா முதல்வர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, அணையின் நீர் உயர்ந்துவருவதால் அதிகபட்சமாக தமிழ்நாட்டிற்கு தண்ணீரைத் திறந்துவிடுங்கள் என்று கடிதமும் எழுதியிருக்கிறார். இந்தநிலையில்தான் கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகரான பிருத்விராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவிட்டிருக்கிறார்.

 

அதாவது 125 ஆண்டுகளுக்கு மேலான பழமையான முல்லைப் பெரியாறு அணை இருந்துவருவதால் அதை உடைக்க வேண்டுமே தவிர, ஆய்வு பற்றி எல்லாம் தெரிந்துகொள்ள விரும்பவில்லை என்றொரு கருத்தைப் பதிவிட்டிருக்கிறார். அதைக் கண்ட கேரளாவின் முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால், துல்கர் ஜெயராம், திலீப் உள்ளிட்ட நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் சார்பாகவும் நடிகர் பிரித்விராஜ்க்கு ஆதரவாக முல்லை பெரியார் அணையை இடிக்க வேண்டும் என்று ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் பதிவுசெய்தனர். அதுபோல் தமிழ் நடிகரான விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த கேரளா ரசிகர்களும் முல்லை பெரியாரை இடிக்க வேண்டும் என்று பதிவிட்டு வருகிறார்கள்.

 

Controversial actor Prithviraj tweets, Politicians and public who involved the struggle!

 

இது இந்திய அளவில் வைரலாக பரவி முல்லைப் பெரியாறுக்கு எதிராகவும் ஆதரவாகவும் கருத்துகள் பரவிவருகின்றன. அதேபோல், கேரளாவில் உள்ள பல மாவட்டங்களிலும் முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்ற பேச்சு மலையாளிகள் மத்தியில் பரவலாகவே இருந்துவருகிறது. கேரள முன்னணி நடிகரான பிரித்விராஜின் இந்தச் செயலால் கேரளாவிலுள்ள பிரபல நடிகர்களின் ரசிகர்கள் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக குரல் கொடுத்துவருவதைக் கண்டு தேனி மாவட்ட மக்கள் உட்பட தமிழ்நாடு விவசாயிகள், பொதுமக்கள், அரசியல்வாதிகள், பல்வேறு அமைப்புகள் என பலரும் அதிர்ச்சியடைந்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில்தான் அகில இந்திய ஃபார்வர்ட் கட்சியின் தேனி மாவட்ட பொதுச்செயலாளர் சக்கரவர்த்தி தலைமையில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், முல்லை பெரியாறு அணைக்கு எதிராக கருத்து தெரிவித்த நடிகர் பிரித்விராஜ் உருவ பொம்மையை எரித்து கண்டன குரல் எழுப்பினர். அது மட்டுமல்லாமல் முல்லை பெரியாறு அணையில் 152 அடி தண்ணீரை நிறுத்துவோம் என்று வலியுறுத்தி கோஷம் போட்டனர். அதன் பின்னர் மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் முல்லை பெரியாறு அணைக்கு எதிராக சர்ச்சை கருத்துகளை வெளியிட்ட நடிகர் பிருத்விராஜை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் அதோடு அணைக்குத் தமிழ்நாடு போலீஸ் அல்லது மத்திய போலீசை பாதுகாப்பு பணியில் போட வேண்டும் என்று கோரி மனு கொடுத்திருக்கிறார்கள்.

 

Controversial actor Prithviraj tweets, Politicians and public who involved the struggle!

 

அதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேனி மாவட்ட நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன் தலைமையில் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். மேலும், கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளும் போராட்டத்தில் குதிக்கவும் தயாராகிவருகிறார்கள். கேரளாவிலுள்ள விஜய் ரசிகர் மன்றத்தினர் முல்லை பெரியாறு அணைக்கு எதிராக குரல் கொடுத்ததைக் கண்டு தேனி மாவட்ட விஜய் ரசிகர்கள் முல்லை பெரியாறு அணைக்கு ஆதரவாக தங்களது கருத்துகளை ட்விட்டரில் பதிவுசெய்து, ‘முல்லை பெரியாறு அணையை தொடர்ந்து பாதுகாப்போமே தவிர அணையை இடிக்க அனுமதிக்க மாட்டோம்’ என்று பதிலடி கொடுத்துவருகிறார்கள். அதோடு கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு முல்லைப் பெரியாறுக்கு ஆதரவாக தேனி மாவட்டம் உட்பட தென்மாவட்ட மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டி.டி.வி. தினகரனின் வேட்புமனு ஒரு மணி நேரம் நிறுத்திவைப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TTV Dhinakaran nomination is on hold for an hour

தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை குறித்த கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு நடைபெற்றது.

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 43 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் 33வது எண்ணில் வந்த டி.டி.வி. தினகரனின் வேட்பு மனுவிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் இணையதளத்தில் காலை 11.30 மணி வரை டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாததால் அதில் உள்ள விவரங்கள் சரி பார்க்க முடியாததால் அவரின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் அமமுக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிடிவி தினகரன் வேட்பு மனு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை சரிபார்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா தெரிவித்தார். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்து வருகிறது.

Next Story

மரத்தடியில் டி.டி.வி. தினகரனுக்காக காத்திருந்த ஓ.பி.எஸ்‌.!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
OPS waiting for tTV Dinakaran on under the tree

தேனி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.ம.மு.க. வேட்பாளரான டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க.வில் நாராயணசாமி, நாம் தமிழக கட்சி சார்பில் மதன் மற்றும் சில கூட்டணி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் இருந்தாலும் கூட நான்கு முனை போட்டி தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான இன்று (27.03.2024) டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்ய மதியம் இரண்டு மணிக்கு மேல் வருவதாக இருந்தது. ஏற்கெனவே ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகனும் எனக்காக இந்த தொகுதியை விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள் என்று டி.டி.வி. தினகரன் பிரச்சாரத்தின் போது பேசி இருக்கிறார்.

அதை தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்வதை பார்த்து வாழ்த்து கூற ஓ.பி.எஸ். முடிவு செய்து, தனது தொகுதியான ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 01.15 மணிக்கு தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, மாவட்ட செயலாளர் சையது கானும் இருந்தனர். ஆனால் ஓபிஎஸ் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடியிலேயே நின்று கொண்டு அவர்கள் இண்டு பேரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது ஓ.பி.எஸ் வழக்கத்துக்கு மாறாக அதிமுக கரை வேட்டி இல்லாமல் பாடர் கரை போட்ட வேட்டி கட்டி இருந்தார். உடன் வந்த ஒருவர் ஓ.பி.எஸ்.உட்காருவதற்காக கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று ஒருசேர் எடுக்க முயன்றார். அப்பொழுது அங்குள்ள அதிகாரிகளும் தேர்தல் விதிமுறை மீறி வெளியே சேர் கொண்டு போக கூடாது என்று கூறிவிட்டனர். அதைத் தொடர்ந்து தான் ஓ.பி.எஸ்.ஸுடன் அவர்கள் இரண்டு பேரும் தொடர்ந்து 02.14 மணி வரை அதாவது ஒரு மணி நேரம் நின்று கொண்டிருந்தனர். ஆனால், தமிழக முதல்வராக இரண்டு முறை ஓ.பி.எஸ். இருந்தும் கூட அதை எல்லாம் மறந்து விட்டு டி.டி.வி. தினகரன் வருகைக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடி நிழலில் சாதாரணமாக நின்று கொண்டிருந்தார்.

OPS waiting for tTV Dinakaran on under the tree

அதைத்தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் பிரச்சார வேனில் 02.15 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே வந்த டிடிவியை ஓ.பி.எஸ். வரவேற்று சால்வை அணிவித்தார். ஆனால் டிடிவி தினகரன் ஓ.பி.ஆர். உள்பட சிலர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு வந்தனர். அதுவரை ஓ.பி.எஸ். மரத்தடியிலேயே நின்று கொண்டிருப்பதை கண்டு அதன் அருகில் மக்கள் உட்காருவதற்காக இரும்புச் சேர் போட்டு இருப்பதை பார்த்த கட்சிக்காரர்கள் சிலர் அதை எடுத்து வந்து போட்டனர். அதில் ஓ.பி.எஸ். உடன் இரண்டு பேரும் உட்கார்ந்து இருந்தனர். அதன் பின் வந்த டி.டி.வி. தினகரனை மீண்டும் வாழ்த்தினார். அப்பொழுது டி.டி.வி. தினகரன் நீங்களும் வாங்கள் பேட்டி கொடுக்கலாம் என்று கூறி அழைத்துச் சென்றார். ஆனால் டி.டி.வி. மட்டும்தான் பேட்டி கொடுத்தாரே தவிர அதன் அருகிலேயே ஓ.பி.எஸ். நின்று கொண்டே இருந்தார் அதன் பின் பிரச்சாரவேனில் டி.டி.வி. தினகரன்  ஏறும் வரை அருகிலேயே நின்று வழி அனுப்பி விட்டு தான் திரும்பி சென்றார்.