Skip to main content

“கொடுத்தால் இரட்டை இலை; இல்லையென்றால் வாழை இலை” - நடிகர் மன்சூர் அலிகான்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Actor Mansoor Ali Khan has spoken about AIADMK in parliamentary elections

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட போவதாக நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார் இதற்கு முன்பு ஆரணி தொகுதியில் போட்டியிடப் போவதாக கூறினார். தற்பொழுது வேலூர் தொகுதி என்கிறார். இதற்காக அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்தினார். இந்நிலையில் மார்ச் 18 ஆம் தேதி வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள வ உ சி நகரில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் தனக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அங்கு கடைகளில் சென்று அமர்ந்து குழந்தைகளை கொஞ்சியும் மக்களிடையே தமக்கு ஆதரவு திரட்டினார்

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில், "நான் நின்றால் மாநாடு, நடந்தால் ஊர்வலம், படுத்தால் பந்த். எப்போது வேலூரில் இறங்கினேனோ அப்போதே பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டேன்” என்றார்.

இதனைத் தொடர்ந்து, கட்சியின் பொதுச் செயலாளர் உங்களை நீக்கியதாக கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, “பாலமுருகன் என்பவர் தான் பொதுச்செயலாளர் என்னை நீக்கியவர் கிடையாது. காசு வாங்கிக்கொண்டு ஏதோ பண்ணி என்னை நீக்கியுள்ளார். இது நான் ஆரம்பித்த கட்சி இது இந்தியா முழுக்க ஆரம்பிக்கப்பட்ட இயக்கம். எலெக்சன் கமிஷன் அப்ரூவலில் பாலமுருகன் என போட்டு உள்ளது” என்றார்.

அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை குறித்த கேள்விக்கு, “அவர்களிடம் போய் பேசி விட்டு வந்தேன். அது குறித்து இன்னும் ஏதும் தகவல் இல்லை. நான்  இங்கே வேலூரில் நிற்கிறேன். கொடுத்தால் இரட்டை இலை, இல்லை என்றால் வாழை இலை. வாழை இலை போட்டு உட்கார்ந்து சாப்பிட வேண்டியதுதான். வாழை இலை உடம்புக்கு நல்லது, இரட்டை இலையும் உடம்புக்கு நல்லது; ஆனால் கறிவேப்பிலையாக மாறிவிடக்கூடாது. அவர்களை குறை சொல்லக்கூடாது அது அம்மாவோட கட்சி; தாய் கழகம். வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு வேட்பு மனு ஏற்றுக் கொண்ட பின்பு என்னுடைய திப்பு சுல்தான் வாளை சுழற்றுவேன். இப்பவே வாளை சுழற்ற வைக்காதீர்கள் இது திப்புவின் வாள்” என்றார்.

ஐந்து தொகுதிகளில் போட்டியிடுவேன் என கூறியிருந்தது குறித்த கேள்விக்கு, “அது இப்போது இயலாது பொருளாதார வசதி இல்லை. கூட்டணி தருவார்கள் என்று பார்த்தேன் தரவில்லை. நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணி ஏதும் பேசவில்லை அவர் இறந்த பிறகு அதோடு சென்றுவிட்டது. பிரதமர் மோடி, ஜெயலலிதா அம்மாவை பாராட்டினார். அவரே தான் போட்டுத் தள்ளினார். அவரே தான் தீர்த்துக் கட்டினார் அந்த சரித்திரம் மக்களுக்கு தெரியும்.

இந்த தேர்தலை பாரதப் பிரதமர் திருவிழா என்று கூறியுள்ளார். அவர் ஏற்கனவே முடித்து விட்டார். தேர்தல் திருவிழாவில் நான் பபூன் அல்ல, அவரே பபூன் ஆக நடிக்கிறார். எதிர்க்கட்சியினர் கேள்வி கேட்க மாட்டார்கள். ஏனென்றால் ஈடி வந்துவிடும்; அந்த பயம் நமக்கு  இல்லை. ஒரே மக்கள் ஒரே நாடாக இந்தியா உள்ளதா ஒரே தேர்தல் என்பது எப்படி சாத்தியம்” என்றார்.

மேலும், டிஜிட்டல் இந்தியாவில் வாக்கு எண்ணிக்கையை ஊறவைத்து ஊறுகாய் போட்டு 45 நாட்களுக்குப் பிறகு முடிவை அறிவிப்பார்கள். இதுதான் உலகத்திலேயே இல்லாத டிஜிட்டல் இந்தியா. வென்றால் வேலூர் கோட்டை, இல்லை என்றால் டெல்லி செங்கோட்டை ஒற்றை ஆளாக இருந்தாலும் உப்பாக இருப்பேன், ஒற்றை ஆளாக இருந்தாலும் ஒரப்பாக(காரம்) இருப்பேன். தத்திகள் மாறி நான் இருக்க மாட்டேன்” என்று  மன்சூர் அலிகான் கூறினார்.

சார்ந்த செய்திகள்