Advertisment

நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் ஒன்றில்‘குணசேகரன்’ கதாபாத்திரம் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார். இன்றுகாலை டப்பிங் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இறுதிச் சடங்கிற்காகத் தேனி எடுத்துச் செல்ல உள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.