Skip to main content

“சசிகலாவுடன் தொலைப்பேசியில் யார் தொடர்பு வைத்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்”- திருச்சியில் அதிமுகவினர் தீர்மானம்!!

Published on 18/06/2021 | Edited on 18/06/2021
"Action will be taken against anyone who has any contact with Sasikala on the phone" - AIADMK resolution in Trichy

 

திருச்சி புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மூ.பரஞ்சோதி தலைமையேற்றார். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அ.இ.அ.தி.மு.க. முழுவதும் தகர்ந்து போய்விடும். இனி தமிழ் நாட்டில் குழப்பம் தான் மிஞ்சும் என்று எண்ணியவர்களுக்கு ஓர் சிறப்பான முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் ஆட்சியை நடத்தி தமிழ் நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றவர் நம்முடைய கட்சியின் இருபெரும் தலைவர்கள்.

 

தி.மு.க.வின் சூழ்ச்சிகள் , தந்திரங்கள், சதிசெயல்கள் அனைத்தையும் முறியடித்து மக்களின் பேரண்பை பெற்று கழகத்தின் தலைமையிலான கூட்டணி 75 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளது. கழகத்தின் சார்பில் பிரதான எதிர்கட்சியாக 66 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று வலுவான ஓர் எதிர்க்கட்சியாக உள்ளது. இந்நிலையில் நம் உழைப்பை சுரண்டும் வகையில் சசிகலா மற்றும் அவர் குடும்பத்தினர் கழகத்தை வசப்படுத்திக் கொள்ளவும், அ.இ.அ.தி.மு.கவை அபகரித்து கொள்ள வஞ்சக வலையை விரித்து கொண்டுருக்கிறார்கள். மேலும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அரசியலிருந்து ஒதுங்கி இருக்க போவதாக அறிவித்த சசிகலா இப்போது கழகம் வலிவும் , பொலிவும் கழக தொண்டர்களின் பெரும்பான்மையும் மக்களின் செல்வாக்கு பெற்று இருப்பதை பார்த்து அரசியலில் தன் குடும்பத்திற்கும் அரசியலில் முக்கியத்துவத்தையும், பாதுகாப்பையும் தேடி கொள்ள கழகத்தை அபகரிக்கும் முயற்சியில் இறங்க போவதாக ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் தெரிவித்து வருகிறார். 

 

சிலருடன் பேசுவதும் அதை ஊர் அறிய தொலைக்காட்சியில் ஒளி பரப்புவதுமான , வினோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். சசிகலாவையோ அவருடைய குடும்பத்தையோ ஒருபோதும் திருச்சி புறநகர் மாவட்ட கழகம் சார்பில் அனுமதிக்கவோ ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம். சசிகலா மற்றும் அவர் குடும்பத்தினர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் ஆக கூட முடியாது. சசிகலாவுடன் தொடர்பு வைத்திருந்தாலோ தொலைபேசியில் தொடர்பு கொண்டாலோ அதிமுக சட்ட திட்டங்களுக்கு மாறாகவும் இயக்கத்தின் லட்சியங்களுக்கு மாறாகவும் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவ்வாறு செயல்படுபவர்கள் யாராக இருப்பினும் தயவு தாட்சயமின்றி தலைமை கழகத்தின் மூலமாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க திருச்சி புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பாக வலியுறுத்துகிறோம்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.