/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/trichy-admk-2.jpg)
திருச்சி புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மூ.பரஞ்சோதி தலைமையேற்றார். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அ.இ.அ.தி.மு.க. முழுவதும் தகர்ந்து போய்விடும். இனி தமிழ் நாட்டில் குழப்பம் தான் மிஞ்சும் என்று எண்ணியவர்களுக்கு ஓர் சிறப்பான முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் ஆட்சியை நடத்தி தமிழ் நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றவர் நம்முடைய கட்சியின் இருபெரும் தலைவர்கள்.
தி.மு.க.வின் சூழ்ச்சிகள் , தந்திரங்கள், சதிசெயல்கள் அனைத்தையும் முறியடித்து மக்களின் பேரண்பை பெற்று கழகத்தின் தலைமையிலான கூட்டணி 75 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளது. கழகத்தின் சார்பில் பிரதான எதிர்கட்சியாக 66 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று வலுவான ஓர் எதிர்க்கட்சியாக உள்ளது. இந்நிலையில் நம் உழைப்பை சுரண்டும் வகையில் சசிகலா மற்றும் அவர் குடும்பத்தினர் கழகத்தை வசப்படுத்திக் கொள்ளவும், அ.இ.அ.தி.மு.கவை அபகரித்து கொள்ள வஞ்சக வலையை விரித்து கொண்டுருக்கிறார்கள். மேலும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அரசியலிருந்து ஒதுங்கி இருக்க போவதாக அறிவித்த சசிகலா இப்போது கழகம் வலிவும் , பொலிவும் கழக தொண்டர்களின் பெரும்பான்மையும் மக்களின் செல்வாக்கு பெற்று இருப்பதை பார்த்து அரசியலில் தன் குடும்பத்திற்கும் அரசியலில் முக்கியத்துவத்தையும், பாதுகாப்பையும் தேடி கொள்ள கழகத்தை அபகரிக்கும் முயற்சியில் இறங்க போவதாக ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் தெரிவித்து வருகிறார்.
சிலருடன் பேசுவதும் அதை ஊர் அறிய தொலைக்காட்சியில் ஒளி பரப்புவதுமான , வினோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். சசிகலாவையோ அவருடைய குடும்பத்தையோ ஒருபோதும் திருச்சி புறநகர் மாவட்ட கழகம் சார்பில் அனுமதிக்கவோ ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம். சசிகலா மற்றும் அவர் குடும்பத்தினர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் ஆக கூட முடியாது. சசிகலாவுடன் தொடர்பு வைத்திருந்தாலோ தொலைபேசியில் தொடர்பு கொண்டாலோ அதிமுக சட்ட திட்டங்களுக்கு மாறாகவும் இயக்கத்தின் லட்சியங்களுக்கு மாறாகவும் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவ்வாறு செயல்படுபவர்கள் யாராக இருப்பினும் தயவு தாட்சயமின்றி தலைமை கழகத்தின் மூலமாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க திருச்சி புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பாக வலியுறுத்துகிறோம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)