Skip to main content

கட்டுமானப் பணி நடைபெற்றுவரும் பாலத்திலிருந்து ஸ்லாப் விழுந்து விபத்து

Published on 22/01/2022 | Edited on 22/01/2022

 

Accident on the bridge being built on the river Kollidam!
மாதிரி படம் 

 

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் பாலத்தில் விபத்து ஏற்பட்டிருக்கிறது.  

 

தஞ்சை மாவட்டம், அணைக்கரையில் பாலத்தை இணைப்பதற்கான சிமெண்ட் ஸ்லாப் கொள்ளிடம் ஆற்றில் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. நான்கு வழிச்சாலைக்காக ரூ.100 கோடியில் மேம்பாலப் பணி நடக்கும் நிலையில், பில்லர் மேல் இருந்த ஸ்லாப் இன்று அதிகாலை விழுந்ததுள்ளது. தஞ்சை-விழுப்புரம் விக்கிரவாண்டி இடையே ரூ.3,517 கோடியில் நான்கு வழிச்சாலை பணி நடந்துவருகிறது.  


இதற்கான கட்டுமான பணிகள் கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்றுவருகின்றன. இதன் இறுதி பணி இந்த ஆண்டு முடியும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது சுமார் 200 அடி அளவில் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. தஞ்சாவூர் - அரியலூர் ஆகிய பகுதிகளை இணைக்கக்கூடிய பகுதியின் 4 மற்றும் 5 ஆகிய பில்லர்களை இணைக்கக்கூடிய பகுதி தற்போது இடிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. 


பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர். மேலும், தொழில்நுட்ப நிபுணர்களும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாலும் விபத்து அதிகாலை ஏற்பட்டதாலும், யாருக்கும் பாதிப்பும் சேதமும் ஏற்படவில்லை என அங்கு பணியில் இருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொள்ளிடம் ஆற்றில் நடந்த சோகம்!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
3 people lost their lives in Kollidam river

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்தன் என்பவரது மகன்கள் சந்தோஷ்(13), சந்திரன்(10). இருவரும் தங்கள் வீட்டிற்கு நிகழ்ச்சிக்கு வந்திருந்த உறவினர்களின் பிள்ளைகள் சுமார் 10 பேருடன் நேற்று காலை திருமானூர் கொள்ளிடம் ஆற்றிற்குச் சென்று குளித்துள்ளனர். இந்த நிலையில், சிறுவர்களில் சிலர் புதை சூழலில் சிக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களைக் காப்பாற்ற மற்ற சிறுவர்கள் முயன்றுள்ளனர். அப்போது 10 சிறுவர்களும் சூழலில் மாட்டிக்கொண்டனர்.

இதனைக் கண்ட அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள், மீனவர்கள், தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த சிறுவர்களில் 7 பேரைக் காப்பாற்றினர். ஆனால் மூன்று பேரைக் காப்பாற்ற முடியவில்லை. இது குறித்து உடனடியாக அரியலூர் திருவையாறு தீயணைப்புத் துறையினருக்குத்  தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் பணியைத் தொடங்கிய தீயணைப்பு வீரர்கள் ஆற்றுப் பகுதியில் பல மணி நேரம் தேடிய பிறகு 3 பேரில் அம்பத்தூரை சேர்ந்த தீபக்(17), தஞ்சாவூரை சேர்ந்த பச்சையப்பன் ஆகிய இருவரின் உடலை மீட்டனர். 

இரவு நேரம் நெருங்கிவிட்டபடியால் இன்று காலை தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர் குழுவினர் இணைந்து மீண்டும் தேடினர். அதில் இன்று காலை மூன்றாவது நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உறவினர் வீட்டு விசேஷத்திற்கு வந்த இளம்பிள்ளைகள் கொள்ளிடம் ஆற்றுச்சுழலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

ரயில் படிக்கட்டில் பயணம்; மணல் பரப்பில் சடலமாக கிடந்த இளைஞர்

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

 Travel on the train stairs; A young man lying on the sand

 

ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த இளைஞர் ஒருவர் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் விரைவு ரயில் முன்பதிவு இல்லாத பெட்டியில் பாபநாசம் செல்வதற்காக ஏறிய இளைஞர் ஒருவர் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். சீர்காழிக்கு முன்பாக கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் ரயில் சென்று கொண்டிருந்த பொழுது படிக்கட்டில் அமர்ந்து கொண்டு இருந்து பயணம் செய்த அந்த இளைஞர் தடுமாறி கீழே விழுந்தார். ஆனால் யாரும் கவனிக்காமல் விட்டனர். திடீரென உடன் வந்தவர்கள் தங்களுடன் வந்த இளைஞரை காணவில்லை என மயிலாடுதுறை மாவட்டம் ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனடியாக போலீசார் கொள்ளிடம் ஆற்றின் பாலத்தின் பகுதிக்குச் சென்று பார்த்தபோது ஆற்றின் மணல் பரப்பில் இளைஞர் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார். இளைஞரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருநெல்வேலியை சேர்ந்த அப்பாஸ் என்பது தெரியவந்தது.