Published on 29/09/2019 | Edited on 29/09/2019
காட்டுமன்னார்கோயில் வட்டம் குமாரகுடியில் நரிக்குறவர் பகுதியில் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான வேலைக்கான கார்டு கொடுத்து நான்கு ஆண்டுகளாகியும் இதுநாள் வரை வேலை கொடுக்கவில்லை.
![protest](http://image.nakkheeran.in/cdn/farfuture/4xQ5csFEBEL2RJ5gXisMOuITnHi-8R0JybG35jsM1WY/1569760477/sites/default/files/inline-images/IMG-20190929-WA0020.jpg)
ஆனால் வேலை கொடுத்தது போல் கணக்கெழுதி பணம் எடுக்கப்பட்டுள்ளனர். இதனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், 100 நாள் வேலை கேட்டும் கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தை விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.