Skip to main content

தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 9 லட்சம் ரூபாய் திருட்டு; மர்ம நபர்கள் அட்டகாசம்!

Published on 07/06/2022 | Edited on 07/06/2022

 

9 lakh theft at private IAS training center; Mystery figures abound!

 

சேலத்தில், தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் புகுந்து மேஜை டிராயரில் வைக்கப்பட்டிருந்த 9.28 லட்சம் ரூபாய் மற்றும் செல்போனை திருடிச் சென்றது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சேலம் சூரமங்கலம் ஏவிஆர் ரவுண்டானா அருகில் தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. சேலம் கன்னங்குறிச்சி டி.கே.வெங்கடாசலம் தெருவைச் சேர்ந்த திலக்ராஜ் (வயது 42) என்பவர், இந்த பயிற்சி மையத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 5) காலை வழக்கம்போல் பயிற்சி மையத்திற்குச் சென்று பணிகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது அலுவலக செலவிற்காக பணம் தேவைப்பட்டதால், தனது மேஜை டிராயரை திறந்துள்ளார். 

 

ஆனால் டிராயரில் வைத்திருந்த 9.28 லட்சம் ரூபாய் மற்றும் ஒரு செல்போன் மாயமாகி இருப்பது தெரிய வந்தது. மர்ம நபர்கள் அவற்றை திருடிச்சென்றிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திலக்ராஜ், சூரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை உதவி ஆணையர் நாகராஜன், ஆய்வாளர் கந்தவேல் தலைமையிலான காவல்துறையினர் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினர். 

 

ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் பூட்டு உடைக்கப்படாமல் இருந்தது. மேலும், மேற்கூரை வழியாக திருடர்கள் வரவும் வாய்ப்பு இல்லை என்பதை அறிந்த காவல்துறையினர், பயிற்சி மையத்தின் அன்றாட நடவடிக்கைகள் பற்றி நன்கு தெரிந்தவர்கள்தான் போலி சாவி தயாரித்து, பூட்டை திறந்து, சாவகாசமாக உள்ளே சென்று பணம், செல்போனை திருடிச் சென்றிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

 

சம்பவத்தன்று, அந்த பயிற்சி மையத்திற்குள் வந்து சென்ற மர்ம நபர்கள் குறித்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை சேகரித்து, ஆய்வு செய்து வருகின்றனர். 


 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

 கடன் கொடுக்க மறுத்ததால் இளைஞர் படுகொலை!

Published on 05/10/2023 | Edited on 05/10/2023

 

Youth incident for refusing to give loans

 

விழுப்புரம் நகரை ஒட்டி உள்ள சித்தேரி கரை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் என்கிற ராம்குமார். இவர் வட்டிக்குப் பணம் கொடுத்து வசூல் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் சில நாட்களுக்கு முன்பு 2000 ரூபாய் பணம் கடன் கேட்டுள்ளார். ஆனால் பாலாஜி வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வருவதால் ராம்குமார் பணம் தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ராம்குமார் விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் பாலாஜி மீது புகார் அளித்துள்ளார். 

 

இதையடுத்து பாலாஜி ராம்குமார் மீது கோபத்திலிருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று ராம்குமார் தனது வீட்டிலிருந்து வட்டிக்கு பணம் கொடுத்த நபர்களிடம் வசூலிக்கச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். அப்போது, சித்தேரி ரயில் நிலைய பாதை அருகே எதிரே வந்த பாலாஜி ராம்குமாரை இடைமறித்து ஏன் எனக்கு வட்டிக்கு பணம் தரவில்லை என்று கேட்டு வாக்குவாதம் செய்தார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராம்குமாரைச் சரமாரியாகக் குத்தியுள்ளார். அதில் ராம்குமார் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்துள்ளார். 

 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் ராம்குமாரை மீட்டு முண்டிப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராம்குமார் உயிரிழந்தார். இது குறித்து ராம்குமாரின் உறவினர்கள் விழுப்புரம் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை தலைமறைவாக உள்ள பாலாஜியைத் தேடி வருகின்றனர். ஏற்கனவே பாலாஜி மீது ராம்குமார் கொடுத்த புகாருக்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது இந்த கொலை சம்பவம் நடந்திருக்காது என்று அவரது உறவினர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ராம்குமாருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

'வீட்டு கடனை கட்டவில்லை' - நிதிநிறுவன ஊழியர் செய்த செயலால் அதிர்ச்சி

Published on 05/10/2023 | Edited on 05/10/2023

 

'Didn't Pay the Purchased Loan'-Shocked by the Action of the Financial Institution Employee

 

தனியார் நிதி நிறுவன ஊழியர் ஒருவர் 'வீட்டுக் கடனை கட்டவில்லை' என பெரிய எழுத்துக்களில் பெயிண்டில் எழுதி வைத்துவிட்டு சென்ற சம்பவம் தேனியில் நிகழ்ந்துள்ளது.

 

தேனி மாவட்டம் அன்னை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தன்னுடைய வீட்டை அடைமானம் வைத்து மூன்று லட்ச ரூபாய் கடனாக பெற்றதாகக் கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி சூழல் காரணமாக ஒன்பது மாதமாக கடன் தவணையைக் கட்ட முடியாமல் இருந்துள்ளார். கடனைத் திருப்பி செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 9 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முறையாக வாங்கிய கடனை பிரபு செலுத்தி வந்துள்ளார்.

 

கடந்த செப்டம்பர் மாதமே முழு கடன் தொகையும் கட்டியதாக பிரபு தரப்பில் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கடன் தொகையை கட்டியதால் வீட்டு பத்திரம் வேண்டும் என கேட்டுள்ளார். அப்பொழுது பிரபுவின் வீட்டிற்கு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கடனை செலுத்தவில்லை எனக்கூறி இரண்டு பேர் இருசக்கர வாகனங்களை எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த பிரபு காவல் துறையினருக்கு புகார் கொடுத்து இருசக்கர வாகனங்களை மீட்டுள்ளார்.

 

இதனால் ஆத்திரமடைந்த நிதி நிறுவன ஊழியர்கள் 'போலீசில் புகார் கொடுத்து எங்களை அசிங்கப்படுத்தி விட்டாய். உன்னை சும்மா விடமாட்டோம்' என மிரட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் மகேந்திரபிரபு மது போதையில் பிரபுவின் வீட்டிற்குச் சென்று ஸ்பிரே பெயிண்ட் மூலம் 'வெரிடாஸ்' நிறுவனத்தில் கடன் பெற்ற வீட்டு கடன் கட்டவில்லை' என சுவரில் எழுதியுள்ளார். இது குறித்து வீட்டு உரிமையாளர் பிரபு கேட்டபோது 'அப்படித்தான் செய்வேன்' என்று மிரட்டல் தொனியில் பேசியதாக பிரபு தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்