Skip to main content

ஆசிரியர் திட்டியதால் 8 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

Published on 04/11/2022 | Edited on 04/11/2022

 

8th std student passed away nagappatinarm

 

எட்டாம் வகுப்பு மாணவி நேத்ரா ஸ்ரீநிதி என்பவர் குளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பாகியுள்ளது.

 

நாகை அடுத்துள்ள தெத்தி சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் மாதவன். இவரது மகள் நேத்ரா ஸ்ரீநிதி(14). இவர் நாகையில் உள்ள நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். கணித பாடத்தில் காலாண்டுத்  தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றிருக்கிறார். இதனால்  எட்டாம் வகுப்பு ஆசிரியர் இந்திரகுமார் என்பவர் நேற்று முன்தினம் பெற்றோரிடம் தேர்வு விடைத்தாளில் கையெழுத்து வாங்கி வரச் சொல்லி அனுப்பியிருக்கிறார். 

 

இதையடுத்து, தனது தேர்வு விடைத்தாளில் உள்ள மதிப்பெண்ணை திருத்தம் செய்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வந்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டுபிடித்த ஆசிரியர் இந்திரகுமார் சக மாணவிகள் முன்னிலையில் நேத்ரா ஸ்ரீமதியை திட்டியதாகக் கூறப்படுகிறது. அதோடு அந்த மாணவியின் பெற்றோரிடமும் செல்போன் மூலம்  ஆசிரியர் புகார் தெரிவித்துள்ளார்.

 

இதனால் மனமுடைந்த மாணவி நேத்ரா ஸ்ரீநிதி பள்ளியை முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்லும்போது வீட்டின் அருகே உள்ள குளத்தின் கரையில் தனது புத்தகப் பையை வைத்துவிட்டு தண்ணீரில் குதித்துள்ளார். இதைப் பார்த்து அப்பகுதியில் சென்றவர்கள் கூச்சலிடவே அருகிலிருந்த இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கிய மாணவியை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவி இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

 

இது குறித்து மாதவன் கொடுத்த புகாரின் பேரில் நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். நேத்ரா ஸ்ரீநிதி இறப்புக்கு ஆசிரியர் இந்திரகுமார் தான்  காரணம் எனவும், அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கூறி உடலை வாங்க மறுத்து போராட்டம் செய்தனர். இதனால் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ஏடிஎஸ்பி வேணுகோபால், டிஎஸ்பி பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்த மாணவியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பாகுபாடு இன்றி விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து உறவினர்கள் நேத்ரா ஸ்ரீநிதியின் உடலைப் பெற்று அடக்கம் செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.  

Next Story

பாஜக வெடித்த பட்டாசு; இரண்டு குடிசைகள் எரிந்து நாசம்; மக்கள் போராட்டம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
BJP burst firecrackers; Two huts were destroyed by fire; People's struggle

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் நாகையில் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு இரண்டு குடிசைகள் மீது பட்டு, பற்றி எரிந்துள்ளது. இதனால் குடிசை வீடுகள் இரண்டு முற்றிலும் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.