Skip to main content

டிராவல்ஸ் ஏஜென்சிகளிடம் 60 லட்சம் மோசடி செய்தவர் கைது!

Published on 19/05/2019 | Edited on 19/05/2019

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மங்கலம்பேட்டையை சேர்ந்த சாதிக் அலி(49) என்பவர் ஏர் டிராவல்ஸ் மற்றும் மணி டிரான்ஸ்பர் ஏஜென்சி நடத்தி வருகிறார்.


 

இவரிடம் கடந்த 14-ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பேயம்பாளையத்தை சேர்ந்த முகமது அனிபா என்பவரின் மகன் பர்கத்அலி(27) என்பவர் மொபைல் போனில் தொடர்பு கொண்டு, 'தான் மங்கலம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணி புரிவதாகவும், ஜெர்மன் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்துள்ள தனது மகன் சென்னையிலிருந்து டெல்லி செல்வதற்காக விமான டிக்கெட் வேண்டும்'  என்றும் கேட்டு, அவரது ஆதார் கார்டு நம்பரை சாதிக் அலியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

 

police


பின்னர் தனது நண்பரின் மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் அவசரத் தேவையாக ரூபாய் 20 ஆயிரம் வேண்டுமென்று வாங்கியுள்ளார்.  மேலும் அந்த நண்பரின் மகன் இறந்துவிட்டதால் அடக்கம் செய்ய மேலும் 20 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது என்று வேறு வேறு வங்கிக் கணக்குகளை அனுப்பி பணம் பெற்றுள்ளார். விமான டிக்கெட் புக் செய்யும் போது இந்த பணத்தை எல்லாம் தருவதாக கூறி உள்ளார். ஆனால் பர்கத் அலி சொன்னபடி பணம் தராததால் சந்தேகமடைந்த சாதிக் அலி மங்கலம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரித்தபோது தான் ஏமாற்றப்பட்டு இருப்பது தெரியவந்தது.  police

 

இது குறித்து மங்கலம்பேட்டை போலீசில் அவர் புகார் செய்ததனடிப்படையில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் பர்கத் அலியின் புகைப்படத்தை கண்டுபிடித்து பில்லூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது பேருந்தில் வந்த பர்கத்அலியை மடக்கி பிடித்தனர்.


 

பின்னர் விசாரணையில் 'ஜஸ்ட் டயல் அப்' பில் டிராவல்ஸ் ஏஜென்சிகளின் நம்பர்களை தெரிந்துகொண்டு தமிழகம் முழுவதும் ஏர் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வரும் 150-க்கும் மேற்பட்டவர்களிடம்  ரூபாய் 60 லட்சம் வரை ஏமாற்றி இருப்பது தெரியவந்தது.  மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானல் போலீஸ் ஸ்டேஷனில் பர்கத்அலி மீது வழக்குப்பதிவு செய்து 40 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  பாரதியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.



இந்த பர்கத்அலி வங்கிகளுக்கு வரும்  வாடிக்கையாளர்களிடம் தன்னை ஒரு ராணுவ வீரர் என  அறிமுகம் செய்து தனது ஏடிஎம் கார்டு தொலைந்து விட்டது என்று கூறி அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் போட சொல்லுகிறேன் என வங்கி கணக்கு என்னை கேட்டு வாங்கி அந்த எண்ணை ஏர் டிராவல்ஸ் ஏஜென்சிகளிடம் கொடுத்து பணத்தை பெற்றுள்ளார்.

 

இவரிடம் பாதிக்கப்பட்டோர் கடந்த ஆண்டு 'டாக்டர் பர்கத்அலியால்  பாதிக்கப்பட்டோர் குழு' என்ற  வாட்ஸ் அப் குழு ஒன்று துவக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.