Skip to main content

தேர்தல் நடக்கும் பகுதியிலிருந்து 5 கி.மீ. சுற்றளவுக்கே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்! 

Published on 29/01/2022 | Edited on 29/01/2022

 

5 km from the polling station. Perimeter rules apply!

 

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் விதிமுறைகள் அமல் படத்தப்பட்டுவிட்டன. இரவு 10 மணிக்கு மேல் கூட்டம் நடத்தக்கூடாது, மூன்று பேருக்கு மேல் இணைந்து பிரச்சாரம் செய்யக்கூடாது, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தனிநபர்கள் பணம் எடுத்துச்செல்லக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. தேர்தல் நடைமுறைகளும், விதிகளும் தேர்தல் நடக்கும் பகுதிக்கு மட்டுமா அல்லது மாநிலம் முழுமைக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

 

இதுக்குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் நாம் விசாரித்தபோது, ‘தேர்தல் நடைபெறும், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் மட்டும்தான் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும். ஊராட்சி பகுதிகளில் தேர்தல் விதிமுறைகள் கிடையாது’ என்றார்கள்.

 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ், தேர்தல் குறித்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், ‘தேர்தல் நடைபெறும் பகுதியில் இருந்து 5 கி.மீ தூரத்துக்கு மட்டுமே விதிமுறைகள் இருக்கும், மற்றப்பகுதிகளில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்காது’ என விளக்கினார்.

 

கிராமப்புறங்களில் அரசின் நலத்திட்டங்கள் வழங்குவது, நிகழ்ச்சிகள் நடத்துவது, விழாக்கள் நடத்துவது போன்ற மற்ற பணிகள் தேர்தல் விதிமுறைகளுக்குள் வராது என்கிறார்கள் அதிகாரிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.