Skip to main content

"கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள 4,500 பணியிடங்கள் ஒரு சில மாதத்தில் நிரப்பப்படும்"- அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு!

Published on 17/08/2022 | Edited on 17/08/2022

 

"4,500 vacancies in the cooperative sector will be filled in a few months" - Minister I. Periyasamy announced!

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இருக்கும் சித்தரேவு அரசு மேல்நிலைப் பள்ளியில் மக்களைத் தேடி முகாம் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் விசாகன் தலைமையில் இன்று (17/08/2022) நடைபெற்றது. 

 

இந்த விழாவில், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு 3,747 பயனாளிகளுக்கு ரூபாய் 7.14 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வாங்கினார். விழாவுக்கு கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஊராட்சித் தலைவர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 

இந்த விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது, "ஆத்தூர் பகுதியில் தொடந்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சித்தரேவு பகுதியில் வாய்க்கால் சரி செய்யப்பட்டு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. குடிநீர் வழங்கும் பணிகள் தொய்வின்றி சீரக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அமைதி பூங்கா பகுதியில் மக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் இன்று நியாய விலைக்கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

 

மேலும், இப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். முதியோர் உதவிக்தொகை கடந்த ஆட்சி காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் கடந்த ஓராண்டு காலத்தில் 2,500 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், வளர்ச்சித் திட்டங்கள் குறைபாடின்றி நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் அனைத்து வேலைவாய்ப்புகளும் வெளிபடை தன்மையுடன் நியமனம் செய்யப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.  

 

மேலும், கூட்டுறவுத் துறையில் இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் 4,500 பணியாளர்கள் நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் வீடு இல்லாமல் இருப்போருக்கு ஏற்கனவே வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும், அனைவருக்கும் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும், ஆத்தூர் வட்டம், சித்தரேவு கிராமத்தில் நடைபெற்ற விழாவில் வருவாய்துறை சார்பில் 1,475 பயனாளிகளுக்கு ரூபாய் 3,27,46,130 மதிப்பீட்டிலும், வேளாண்மைத் துறையின் சார்பில் 499 பயனாளிகளுக்கு ரூபாய் 83,025 மதிபீட்டிலும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 157 பயனாளிகளுக்கு ரூபாய் 8,10,350 மதிப்பீட்டிலும், சமூக நலத்துறையின் சார்பில் 88 பயனாளிகளுக்கு ரூபாய் 22,00,000 மதிப்பீட்டிலும், மீன்வளத்துறையின் சார்பில் 56 பயனாளிகளுக்கு ரூபாய் 18,32,970 மதிப்பீட்டிலும், சுகாதாரத்துறையின் சார்பில் 296 பயனாளிகளுக்கு ரூபாய் 6,04,000 மதிப்பீட்டிலும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 135 பயனாளிகளுக்கு ரூபாய் 6,91,500 மதிப்பீட்டிலும், மகளிர் திட்டம் சார்பில் 330 பயனாளிகளுக்கு ரூபாய் 85,85,000 மதிப்பீட்டிலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில் 604 பயனாளிகளுக்கு ரூபாய் 2,33,25,332 மதிப்பீட்டிலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூபாய் 78,750 மதிப்பீட்டிலும், முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்டம் சார்பில் 20 பயனாளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 83 பயனாளிகளுக்கு ரூபாய் 4,21,473 மதிப்பீட்டிலும் என மொத்தம் 3.747 பயனாளிகளுக்கு ரூபாய் 7.14 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

மத்திய அமைச்சர் மீது ஆர்.எஸ்.பாரதி புகார்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
RS Bharati complains against Union Minister Shoba

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் மொத்தம் 10க்கும்  மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

இத்தகைய சூழலில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால் தான் நடைபெற்றது” எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும், மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேயின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

RS Bharati complains against Union Minister Shoba

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு..க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மத்திய இணை அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்குள் உள்ளது.  சர்ச்சைக்குரிய மற்றும் பிளவுபடுத்தும் கருத்துக்களை அரசியல் தலைவர்கள் பேசக்கூடாது என ஏற்கெனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய இணை அமைச்சரின் பேச்சு கடும் கண்டனங்களைப் பெற்றுள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும், தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்தியதாகவும்  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே மீது தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.