Skip to main content

'' 40 நாட்களாகியும் அதிகாரம் எங்கே...?''-  கேள்வி எழுப்பும் ஊராட்சி மன்ற தலைவர்கள் 

Published on 18/02/2020 | Edited on 18/02/2020

நடக்குமா? நடக்காதா? என்று எதிா்பாா்ப்போடு இருந்த ஊரக உள்ளாட்சி தோ்தல் தமிழகத்தில் கடந்த டிசம்பா் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடந்தது. இதில் 515 மாவட்ட ஊராட்சி கவுன்சில், 5090 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் பதவியிடங்களும், 9624 ஊராட்சி தலைவா் பதவியிடங்களும், 76 ஆயிரத்து 746 ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கும் தோ்தல் நடந்தது. இதில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா்கள் அந்தந்த பதவிகளில் பதவியேற்று கொண்டனா். இதில் பதவியேற்ற உறுப்பினா்களும், தலைவா்களும் அதிகாரமின்றி வெற்று பேப்பா் போல் இருப்பதாக குற்றம்சாட்டி வருகின்றனா்.

 

local election

 

இந்த நிலையில் குமாி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவா்கள் நெடுஞ்செழியன் (தோவாளை), கல்யாணசுந்தரம் (செண்பகராமன்புதூா்), மகேஷ் ஏஞ்சல் (சகாயநகா்), பிராங்ளின் (தடிக்காரன்கோணம்), சஜிதா (பீமநகாி), ரெஜினா (மாதவலாயம்), சதீஷ் (ஞாலம்) ஆகியோா் கலெக்டா் பிரசாந் வடநேரா வை சந்தித்து மனு கொடுத்தனா்.

பின்னா் அவா்கள் நம்மிடம் கூறும் போது... ஊராட்சிமன்ற தலைவா்களாக மக்களால் நாங்கள் தோ்ந்தெடுக்கபட்டு பதவியேற்று 40 நாட்களை கடந்து விட்டோம். ஆனால் பெயரளவுக்கு தான் தலைவராக இருக்கிறமே தவிர எந்த அதிகாரமும் இதுவரை எங்களுக்கு அரசு வழங்க வில்லை. நிா்வாக ரீதியாக எந்த வித ஊராட்சி தொடா்பான மக்கள் நல வளா்ச்சி பணிகள் மேற்கொள்ள வழி வகை செய்து தரப்படவில்லை.

எங்களை தோ்ந்தெடுத்த மக்கள் ஊராட்சியில் உள்ள பல பிரச்சினைகளை சுட்டி காட்டி கேள்வி கேட்கிறாா்கள். ஊராட்சியில் ஊராட்சி செயலா்,  துப்புரவு பணியாளா்கள், குடிநீா் பணியாளா்கள், மின் கம்பியாளா் கிடையாது. அதே போல் தளவாட சாதனங்கள் கிடையாது. மேலும் மக்களுக்கு தேவையான அவசர பணிகள் ஏராளமாக உள்ளன. அதை நடைமுறைபடுத்த முடியாத நிலையல் உள்ளது.

தற்போது கோடை காலம் தொடங்கியிருப்பதால் மக்கள் பணி செய்திட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் செய்ய போதிய அதிகாரத்தை ஊராட்சி மன்ற தலைவா்களிடம் உடனடியாக அரசு வழங்க வேண்டும் என்றனா்.

ஊரக உள்ளாட்சி தோ்தலை நடத்த நீதிமன்றத்தின் கிடுக்கி பிடியால் எப்படியோ அரசு தோ்தலை நடத்தியது. தற்போது மக்கள் வளா்ச்சி பணிகளை செய்ய அந்த தலைவா்களுக்கு அதிகாரம் கொடுக்காமல் இருப்பது வேறு விதமான கேள்வியை எழுப்பியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.