Skip to main content

“இது மட்டும் நடந்தால் மூன்றாவது அலையை எளிதில் கட்டுப்படுத்த முடியும்”- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி!

Published on 29/06/2021 | Edited on 29/06/2021
"The 3rd wave can be easily controlled if the central govt provides the details of the vaccinated - Minister Palanivel Thiagarajan interview

 

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் இறுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “மதுரையில் நேற்று 14 ஆயிரம் பேருக்குச் செய்த கரோனா பரிசோதனையில் 74 பேருக்கு மட்டுமே தொற்று என வந்துள்ளது. இரண்டாம் அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில் மூன்றாம் அலையைக் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

இரண்டாம் அலையின் போது மருத்துவ உள் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டது. மதுரையில் மூன்றாம் அலையை எதிர்கொள்ள முன் மாதிரியாக பைலட் புராஜக்ட் ஒன்றை உருவாக்க உள்ளோம். தடுப்பூசி குறைவாகச் செலுத்தப்பட்ட பகுதிகள், முதியோர், இளைஞர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மூன்றாம் அலையில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. தடுப்பூசி செலுத்திய பகுதிகளில் மூன்றாம் அலை வர வாய்ப்பு இல்லை. எங்கே மூன்றாம் அலை வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கோவின் செயலி ஒன்றிய அரசின் செயலி என்பதால் மாநில அரசிடம் தடுப்பூசி குறித்த தகவலும் இல்லை. தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரங்கள் ஒன்றிய அரசிடம் மட்டுமே உள்ளது. யாருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது போன்ற விவரங்களை மாநில அரசிடம் ஒன்றிய அரசு வழங்கவில்லை. தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரங்களை ஒன்றிய அரசிடம் கோர உள்ளோம்.

 

மேலும், மதுரையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது தொடர்பான விவரங்களை நாளை முதல் மாவட்ட நிர்வாகம் சேகரிக்க உள்ளது. தடுப்பூசி செலுத்தும் விவரங்களை அனைத்து இடங்களுக்கும் பகிர்வது தான் கூட்டாட்சி தத்துவம். தமிழகத்தில் முதன்முறையாக மதுரையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுபவர்களின் விபரங்களைக் கோவின் இணையதளம் போன்று சேகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். எந்த தடுப்பூசியை யார் பயன்படுத்துவது என்பதில் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபாடு இருக்கக் கூடாது. தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரங்களை ஒன்றிய அரசு வழங்கினால் மூன்றாவது அலையை எளிதில் கட்டுப்படுத்த முடியும். ஒரு திட்டத்தை ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி செயல்படுத்தினாலும், திட்டத்தின் முழு தகவல்கள் ஒன்றிய அரசிடம் மட்டுமே இருக்கும். ஒன்றிய அரசிடம் உள்ள தகவல்களை மாநில அரசுக்குக் கொடுத்தால் தான் நடவடிக்கைகள் எடுக்க முடியும், இதுவே கூட்டாட்சி தத்துவம்.

 

ஒவ்வொரு மாநில அரசும் தனித்தனியாகத் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ள முடியாது, யார் யார் எந்தெந்த தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ளலாம் என ஒன்றிய அரசு கூற வேண்டும். ஒன்றிய அரசு ஸ்புட்னிக் வி தடுப்பூசியைக் கொள்முதல் செய்து கொடுத்தால் மக்களுக்கு இலவசமாக வழங்கத் தயாராக உள்ளோம்” எனக் கூறினார். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.