Skip to main content

டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாளில் 3,232 மரக்கன்றுகள் நடும் விழா..!

Published on 16/10/2020 | Edited on 16/10/2020

 

3232 sapling planting ceremony on Dr. Abdul Kalam's birthday ..!


இந்தியாவின் விண்வெளி நாயகர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் 89 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை ரோட்டரி மாவட்டம் 3232ல் இயங்கும் சென்னை நோபிள் ஹார்ட்ஸ் ரோட்டரி சங்கத்தின் சார்பில், அக்டோபர் 15 அன்று, 3,232 மரக்கன்றுகள் நடப்பட்டன. 

 

தி.நகர் வாசன் தெருவில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில் திரைப்பட நடிகர் விவேக், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு விழாவைத் தொடங்கி வைத்தார். தியாகராய நகரில் வாசன் தெரு மற்றும் வடக்கு உஸ்மான் தெருக்களில் இந்த மரக்கன்றுகள் நடப்பட்டன.


இவ்விழாவில், சென்னையில் உள்ள பிரபல வைர வியாபாரி ரொட்டேரியன் மஹாவீர் போத்ரா மற்றும் அ.தி.மு.க எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளரும், உங்களுக்காக சேரிடபிள் ட்ரஸ்ட் நிறுவனருமான டாக்டர் சுனில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நோபிள் ஹார்ட் ரோட்டரி சங்கத் தலைவர் பங்கஜ் கன்காரியா, செயலர் தினேஷ் கடாரியா ஆகியோர் முன்னிலையில் இவ்விழா நடத்தப்பட்டது. மரக்கன்றுகள் நடும் திட்டம் ரோட்டரி சங்கத்தின் சமுதாய வளர்ச்சி சேவைப் பிரிவின் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. இப்பிரிவின் இயக்குநர் ரோட்டேரியன் நரேந்தர் கன்காரியா, மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் ரிஷப் சத்யா, கவுதம் போத்ரா ஆகியோர் இத்திட்டத்தினை முன்னின்று செயல்படுத்தினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அப்துல் கலாமின் முன்னாள் ஆலோசகர் தலைமையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா! (படங்கள்)

Published on 03/11/2021 | Edited on 03/11/2021

 

நேற்று (2.11.2021) சென்னை வடபழனியில் உள்ள க்ரீன் பார்க்கில் ஸ்மார்ட் வில்லேஜஸ் என்னும் மாபெரும் புத்தக வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்தப் புத்தக பங்களிப்பாளர்களில் கல்வியாளர்கள், மூத்த அரசாங்க அதிகாரிகள், பொது சுகாதார நிபுணர்கள், தொழில் முனைவோர், சமூக ஆர்வலர்கள் மற்றும் மிக முக்கியமாக தீர்வு செயல்படுத்தப்படுபவர்கள் ஆகியோர் அடங்குவர். இந்த நிகழ்ச்சியில் வெ. பொன்ராஜ், நக்கீரன் ஆசிரியர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  

 

 

Next Story

மாணவர்கள் கொண்டாடிய டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாள் (படங்கள்)

Published on 16/10/2021 | Edited on 16/10/2021

 

சென்னை, கண்ணகிநகர் அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம் சார்பில் கண்ணகி நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று (15.01.2021) டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. முன்னாள் குடியரசுத் தலைவரான டாக்டர் அப்துல் கலாமின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக மாணவர்களுக்குப் பேச்சு, கட்டுரை, ஓவியம் மற்றும்  விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நேற்று நடந்த நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டன.

 

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக ஜெ. 11 காவல் நிலைய ஆய்வாளர் ஆல்ஃபின் ராஜ் வருகை தந்து பரிசுகளை வழங்கினார். குறிப்பாக இந்நிகழ்ச்சியில் பரிசுகளாக இயற்கை முறையில் விதைகளுடன் தயாரிக்கப்பட்ட எழுதுகோல், நோட்டு மற்றும் ஆத்திச்சூடி போன்ற புத்தகங்கள் வழங்கப்பட்டன.

 

ad